முத்து கேட்ட கேள்வி, விஜயாவால் சந்தோஷத்தில் ரோகிணி மனோஜ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயா செய்த ஏற்பாட்டை பார்த்து ரோகினி மனோஜ் சந்தோஷப்பட்டு இருக்கின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்க விஜயா பார்த்துவிட்டு வாசலில் கடுப்பாகி நிற்கிறார் கொஞ்ச நேரத்தில் சிந்தாமணியும் வந்துவிட இவர்கள் இருவரும் பார்வதி சொல்லும் கதையை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர் பிறகு உள்ளே வந்த விஜயா சிவனை இன்னைக்கு கிளாஸ் கிடையாது நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி விட பார்வதி அவரை வழி அனுப்ப சொல்லுகிறார் உடனே விஜயா கடுப்பாக என்னாச்சு மாஸ்டர் என்று சிந்தாமணி கேட்கிறார் இவங்க பழக்கறது உங்களுக்கு புடிக்கலையா என்று கேட்க ஆமா என்று விஜயா சொல்லுகிறார் வேணும்னா சிவன பரலோகத்துக்கு அனுப்பிடலாமா என்று கேட்க அதெல்லாம் வேணாம் இவங்களை பழக விடாம இருந்தா போதும் என்று சொல்லுகிறார். பிறகு பார்வதி வந்துவிட என் மருமக இவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்கா என்று சொல்லுகிறார்.

ரோகினி பண்ணது பெருமையான விஷயம் அவ இப்பவே இல்ல ஜாதி பதி ஆயிட்டா கண்டிப்பா அவங்க கோடீஸ்வரனா மாறிடுவாங்க எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு என்று சொல்லுகிறார். அவங்களுக்கு இப்ப நான் ஏதாவது நல்லது பண்ணியாகணும் இத்தனை நாளா நான் பிரிச்சு வச்சுட்டேன் என்று சொல்லி பார்வதி இடம் ஜோசியக்கார்கிட்ட எனக்கு நாள் நல்லா இருக்கான்னு கேட்டு சொல்லு என்று சொல்ல பார்வதியும் நல்லா இருக்கிறதா சொன்னாங்க என்ன சொல்லுகிறார் உடனே அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யணும் என விஜயா சொல்லுகிறார் அவங்களுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சா என்ன என்று கேட்க அவ பொய் சொல்லிட்டாலும் பிரிச்சு வச்சுட்ட இப்ப நானே அதை சரி பண்ணிடுவேன் என சொல்லுகிறார். விடுங்க மாஸ்டர் டெக்ரேசன் நான் பாத்துக்குறேன் என சிந்தாமணி சொல்லுகிறார் பிறகு பார்வதியை நான் வாங்க போலாம் போய் வாங்கிட்டு வந்துடலாம் என கூப்பிடுகிறார்.

பிறகு மனோஜ் கட்டில் பூ டெக்ரேஷன்களை சிந்தாமணி செய்து விட விஜயா வந்து பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு சிந்தாமணி என்று சொல்லுகிறார் உடனே முத்து வந்து எட்டிப் பார்த்துவிட்டு அமைதியாக நிற்க அண்ணாமலை வந்து என்னத்துக்குடா போயி பார்த்துட்டு இருக்க என்று கேட்கிறார் டெகரேஷன் பண்ணி வச்சிருக்காங்கப்பா என்று சொல்ல ரவியும் சுருதியும் வந்து அவர்களும் பார்க்கின்றனர். இதெல்லாம் எதுக்காக இருக்கும் என்று யோசிக்க அவங்க இத்தனை நாளா பொய் சொல்லிட்டாங்கன்னு பிரிச்சு வச்சிருந்தாங்க இப்ப 40 லட்சம் வர போகுதுன்னு ஒன்னு சேர்த்து வைக்கிறாங்க என்று இவர்களுக்குள்ளேயே பேசிக் கொள்கின்றனர். பிறகு மனோஜ் வந்தால் இதை பார்த்து விட்டு எப்படி நடந்து கொள்வான் என்பதை முத்து நடித்துக் காட்ட சுத்தி உங்களுக்கு எப்படி இப்படி தெரியும்? அப்படி பேசலனா 500 ரூபாய் பெட் என்று சொல்லுகிறார் நீங்க சொல்ற மாதிரி மனோஜ் பேசினால் நான் உங்களுக்கு 500 ரூபாய் தரேன் இல்ல நீங்க எனக்கு 500 ரூபாய் தரணும் என்று சொல்ல அந்த காசு எனக்கு தான் என முத்து சொல்லுகிறார்.

மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர சுருதி இங்க பட்டுப் புடவை பட்டு வேஷ்டி எல்லாம் போடலையா என்று கேட்க இவர்கள் இருவரும் புரியாமல் இருக்க நீங்களே போய் பாருங்க என்ன சொன்ன ரூமை எட்டிப் பார்த்துவிட்டு ரோகிணி வெட்கப்படுகிறார் மனோஜ்க்கு புரியாமல் இருக்க பிறகு காதில் சொன்னவுடன் அவரும் சந்தோஷப்படுகிறார் விஜயா வெளியில் வந்து நிற்க நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் நீங்க இந்த வீட்டோட மொத மருமக நீ முதல் வாரிசு நீதா பெத்து கொடுக்கணும் என்று சொல்லுகிறார். உடனே முத்து பேசியது போல மனோஜ் பேச ஸ்ருதி ரவீடமிருந்து 500 ரூபாய் வாங்கி கொடுக்கிறார். உடனே விஜயா அவங்க எப்படின்னா போறாங்க நீங்க போய் பிரஷ் அ போய்ட்டு வாங்க என்று சொல்லி இரண்டு பேரையும் அனுப்பி வைக்கிறார் பிறகு அனைவரும் சென்று விட அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டு பேசுகிறார்.

அண்ணாமலை விஜயாவிடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? மனோஜ் ரோகினி இடம் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 03-10-25
jothika lakshu

Recent Posts

Yaar Yaarival Video Song

Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…

4 hours ago

Rippipee Lyrical Video

Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…

1 day ago

Sing Geetham Tamil Trailer

Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…

1 day ago

Maaya Kanavo Video Song

Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…

1 day ago

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

1 day ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

1 day ago