விஜயா எடுத்த முடிவு,வித்யா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல வேணாம் சொல்லி இருப்பா என்று சொல்ல அதற்கு அண்ணாமலை மனோஜ்காக தானே செஞ்சா விடு இது காரணமா வச்சு நீ அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சு இருக்கிறதுல்ல என்ன நியாயம் இருக்கு என்று கேட்கிறார்.

நீ இப்படி பிரிச்சி வைக்கிறதுனால வாழ்க்கையை பிடிக்காமல் ரோகினி மலேசியா போயிட்டா என்ன பண்ணுவ என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் ரோகினி வித்யா வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கிறார் வித்யா அவருக்கு ஆறுதல் சொல்ல நான் இவ்வளவு கோபப்படுவார்கள் என்று நினைக்கல பார்லர் விஷயம் தெரிஞ்சு திட்டின மாதிரி திட்டுவாங்கன்னு தான் நினைச்சேன் இதுக்கெல்லாம் காரணம் முத்து தான் என ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டி விடணும்னு நினைச்சு பண்ணிட்டான் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனாவும் முத்து அண்ணாமலை விஜயாவிடம் பேசிய விஷயத்தை பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் வர விஜயா மனோஜிடம் ரோகினி எங்கே என்று கேட்க கடைக்கும் வரலாமா ஃபோன் பண்ணல என்று சொல்லுகிறார் சரி போன் பண்ணி வர சொல்லு என்று சொல்ல மனோஜ் ரோகினிக்கு போன் போட ரோகினி போனை எடுக்க மறுக்கிறார்.

உடனே மனோஜ் பார்லருக்கு போன் போட அவர்களும் அங்கு ரோகிணி வரவில்லை என்று சொல்லுகின்றனர் கொஞ்ச நேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருக்க முத்து மீனாவிடம் ஒன்று போயிருந்த அம்மா வீட்டுக்கு போயிருக்கணும் இல்லனா பிரண்டு வீட்டுக்கு போய் இருக்கணும் இதைவிட இன்னும் யோசிக்க தெரியாது என்று சொல்ல மனோஜ் உடனே வித்யாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ரோகிணி வித்யாவையும் போன் எடுக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

மறுபடியும் ரோகினி மற்றும் வித்யாவிற்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க வித்யா போனை எடுத்தவுடன் ரோகிணி இங்க வரல என்று சொல்லுகிறார் நான் கேட்கவே இல்லையே என்று சொல்ல இல்ல நீங்கள் பண்ணா ரோகினி பற்றி தானே கேட்பீங்க அதனால் தான் சொன்னேன் என்று சொல்ல ரோகிணி வந்தா அம்மா வீட்டுக்கு வர சொன்னா தான் சொல்லு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். உடனே ரோகினி இடம் இப்ப கூட அவங்க அம்மா சொன்னாதான் உனக்கு போன் பண்றேன் அதே அவங்க அம்மா ஒன்னும் எல்லாம் தெரிஞ்சு இந்த பொண்ணு உனக்கு வேண்டான்னு சொன்னா அவ விட்டுட்டு போயிடுவான் இல்ல என்று சொல்ல ரோகினி உன்ன குழப்புவதற்காக நான் சொல்லல இருக்கிற உண்மையை சொல்றேன் என்று சொல்லுகிறார். ரோகினையும் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வருகிறார்.

ரோகினி மனோஜ் என்ன சொல்லுகின்றனர்? விஜயாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 03-01-2025
jothika lakshu

Recent Posts

என் மகள் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளரிடம் தேவயானி வைத்த கோரிக்கை..!

80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…

11 minutes ago

மீனா சொன்ன விஷயம்..கோபப்பட்ட விஜயா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

3 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு சதியில் சிக்க போவது யார்? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

23 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

23 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

24 hours ago