மீனாவை வெறுப்பேற்றிய விஜயா. முத்து கொடுத்த ஷாக்.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்தியா பணத்தை எடுத்து வந்து கொடுத்து இது உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்ச பணம் திருப்பி கொடுத்தாச்சு. இனிமே அக்காவை வீட்டுக்கு அனுப்பி அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று முத்துவிற்கு வார்னிங் கொடுக்கிறார்.

முத்து அந்த பணத்தை எடுக்காமல் இருக்க சத்யா பணம் வேணாம்னா சொல்லுங்க திருப்பி எடுத்துக்கிறேன் என்று சொல்லி பணத்தை எடுக்க போக முத்து இது எங்க அப்பாவோட காசு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இது அவருக்கு தான் சேரனும் என்று எடுத்துக் கொள்கிறார்.

பிறகு சத்யா இனிமே உங்களால நேரடியா பேச முடியவில்லை என்று என் அக்கா அனுப்பி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. இன்னும் பணம் என்ன கேளுங்க என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி என எடுத்துக் கொடுக்க முத்து நீ சொன்ன பிச்சை காசு அதை நீயே வச்சுக்க என்று முகத்தில் தூக்கி எறிகிறார்.

அதைத் தொடர்ந்து இங்கே மீனா சமைத்துக் கொண்டிருக்க விஜயா சாப்பாடு ஆயிடுச்சா என்று கேட்க இன்னைக்கு நேரத்துக்கு சாப்பிட்ட மாதிரி தான் என்று கோபப்பட நீங்க டைமுக்கு கரெக்டா சாப்பிடணும்னா ஜெயிலுக்கு தான் போகணும் அங்க தான் மணி அடிச்சா சோறு கிடைக்கும் என்று சொல்லுவாங்க என்று விஜயாவுக்கு பதில் அளிக்கிறார். அதன் பிறகு பூ ஆர்டர் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து மீனா இல்லையா? கொஞ்சம் மீனாவை கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா நான் அவளை கூப்பிடனுமா என்று கோபப்பட மீனா வந்து பூவை கொடுத்து 600 ரூபாய் என்று கூறுகிறார்.

நீ எதுக்கு பூவை எல்லாம் பிரிட்ஜ்ல வைக்கிற எல்லாத்துலயும் ஒரே மல்லி பூ வாசனையா இருக்கு என்று மீனாவை திட்டி எடுக்க அண்ணாமலை இட்லி மல்லிப்பூ மாதிரி வேணும்னு கேக்குறேல அப்போ மல்லி பூ வாசம் வந்தா என்ன என கவுண்ட்டர் அடிக்கிறார். ரோகினாலும் என் பெயரில் பார்லர் வச்சிருக்கா மாச மாசம் எனக்கு பாக்கெட் மணி தரா இவ என்ன வாடகையா தரா என்று கேட்க உங்க அப்பன் வீட்டு ரோடா? பிளாட்பார்ம்ல தானே கடை வச்சிருக்க அதுக்கு எதுக்கு வாடகை தரவேண்டும் என்று கேட்கிறார்.

இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து வீட்டுக்கு மேல ரெண்டு பிளைட் பறந்துச்சு அவங்களாம் வாடகை கொடுத்தாங்களா? ஏன்னா அம்மா வீட்டுக்கு மேல பறந்துச்சு அதான் கேட்கிறேன் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து அண்ணாமலையிடம் கொடுக்க என்னடா இது என்று கேட்க உன் பணம் தான் பா என்று சொல்லும்போது பணம் என்ற வார்த்தையை கேட்டு ரூமுக்குள் இருந்த மனோஜ் வாயை பிளந்து கொண்டு வெளியே ஓடி வருகிறார்.

இந்த பொண்ணோட அப்பா உன்னை அலைய விட்டதுக்காக கோர்ட் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த அந்த பணத்தை கூட நீ அம்மாகிட்ட கொடுத்து காணாமல் போயிடுச்சுல, அந்த பணம் தான் இது, திருடனை புடிச்சிட்டாங்களாம் என்று பணத்தை கொடுக்க ரோகினி அது எப்படி மொத்த பணமும் வரும் என்று கேள்வி கேட்கிறார். சிலர் திருடினா தான் வராது சிலர் திருடுனா வரும் என கூறுகிறார்.

ஸ்ருதி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா ஆன்ட்டி என்று கேட்க அன்னைக்கு இருந்த நிலைமையில் அதெல்லாம் கொடுக்க முடியல என்று சொல்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் எப்படி பணம் திரும்பி வரும் என்று ஸ்ருதி கேட்க முத்து அன்னைக்கு நான் எனக்கு தெரிஞ்ச போலீஸ்கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்று சமாளிக்கிறார். அவனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்து அவனை செருப்பால் அடித்தால் தான் என் மனசு ஆறும் என்று விஜயா சொல்ல அப்படின்னா நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரூமுக்குள் ரோகிணி மனோஜிடம் இதனை ஏதோ தப்பா இருக்கு, திருடு போன பணம் முழுசா கிடைக்க வாய்ப்பே கிடையாது. ஒன்னு திருடனுக்கும் முத்துவுக்கும் ஏதாவது கனெக்சன் இருக்கணும் இல்ல இந்த திருட்டுக்கு முத்துக்கும் ஏதாச்சும் கனெக்சன் இருக்கணும் என்று சொல்ல மனோஜ் முத்து கோவமா பேசுவான், குடிப்பான். ஆனா பணத்தை எல்லாம் திருட மாட்டான் என்று கூறுகிறார்.

அப்படின்னா இதை திருடனுக்கு முத்து இருக்கும் ஏதோ லிங்க் இருக்கு அவர் சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்ல என்று ரோகிணி கூறுகிறார். இதையெல்லாம் மீனா கேட்டு விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

10 hours ago

Naan Dhaan King Lyric Video

Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…

10 hours ago

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

3 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

3 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

3 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

3 days ago