siragadikka aasai serial episode update 17-02-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா என்ன நடந்துச்சு உண்மைய சொல்லு என்று சத்யாவிடம் கேட்க ஒரு கட்டத்தில் சத்தியா ஆமாம் நான் சிட்டி கிட்ட தான் வேலை செய்கிறேன் அவன் உன்ன மாதிரி இல்ல இப்போ நேர்மையா இருக்கான் கணக்கு வழக்கெல்லாம் நான் தான் கம்ப்யூட்டர்ல என்ட்ரி பண்றேன். வட்டி வாங்க போகும்போது இப்படி நடந்தது என்று சொல்கிறார்.
முத்து மாமா பிரண்டு செல்வாவும் கடன் வாங்கி இருக்காரு ரொம்ப நாளா வட்டி கட்டல, அதை கேட்க போகும் போது தான் இப்படி ஒரு பிரச்சனை வந்தது. மாமா தான் அப்போ என்னை புடிச்சு அடிச்சு கையை உடைத்து விட்டார். வேணா வேணானு நான் எவ்வளவு கத்தி கெஞ்சியும் விடல், குடிச்சி இருந்தார் போல. ஸ்மெல் வேற வந்துச்சு என்று சொல்ல மீனா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சீதா அவர் திருந்தவே மாட்டாரு அவர் எல்லாம் என்ன மனுஷன் என்று சொல்ல மீனாவின் அம்மா அவரை புள்ள மாதிரி நினைச்சேன் ஆனா அவர் என்ன வேலை பண்ணி இருக்காரு என்று கலங்குகிறார். மீனா கோபமாக அங்கிருந்து கிளம்பி செட்டுக்கு வர முத்து கார் பின்னாடி உட்கார்ந்திருக்க செல்வம் அவன் வெளியே போய் இருக்கான் வந்ததும் வீட்டுக்கு வர சொல்றேன் என்று சமாளிக்கிறார்.
நீங்க கூட என்கிட்ட உண்மையை சொல்லல எதுக்காக இப்படி பண்ணீங்க சின்ன பையன் சத்யா அவன எதுக்கு அடிச்சிங்க என்று கேட்க முத்து வெளிய வந்துவிட வெளியே போய் இருக்கிறதா சொன்னிங்க என்று கேட்க செல்வம் நீ வீட்டுக்கு போ மா எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.
ஆனால் முத்து என்ன உனக்கு பிரச்சனை என்று கேட்க எதுக்கு என் தம்பியை பிடிச்சி அடிச்சீங்க என்று மீனா கோபப்படுகிறார். செல்வம் உண்மையை சொல்ல வர முத்து தடுத்து நிறுத்த மீனா நான் என் புருஷன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன் யாரும் இடையில் வர வேண்டாம் என்று செல்வத்தை அமைதியாக இருக்க சொல்ல முத்து அதான் சொல்லிட்டாளா நீ தூரமா என்று அனுப்பி விடுகிறார்.
மீனா கேட்கும் கேள்விகளுக்கு முத்து திமிராக பதில் சொல்வது போலவே பேச இனிமே உங்ககிட்ட பேசவே முடியாது. திருத்தவே முடியாது என்று கோபமாக அங்கிருந்து கிளம்பி வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல அண்ணாமலை அதிர்ச்சியோடு இருக்கிறார்.
முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை ஏன் இப்படி பண்ண என்று கேள்வி கேட்க அவன் பண்ண வேலைக்கு என முத்து உண்மையை சொல்ல வந்து பிறகு அதை சொல்லாமல் மூடி மறைத்து விடுகிறார். முத்துவை ஆளாளுக்கு கேள்வி கேட்க எல்லாரையும் நிறுத்தி கண்டபடி பேசி அடக்க அண்ணாமலை நான் கேள்வி கேட்கலாம்ல என்று அதட்டுகிறார். முத்து அவன் பண்ண வேலைக்கு ஒரு கையோடு விட்டேன் என்று சந்தோஷப்பட சொல்லுங்க என்று சொல்ல மீனா வேண்டாம் மாமா அவரை எதுவும் கேட்காதீங்க. அவரை யாரும் எதுவும் கேள்வி கேட்கக்கூடாது என்று கோபப்படுகிறார். பணம் காசு இல்லாதவங்க என்ன பண்ணாலும் அமைதியாக தான் இருக்கணும் என்று சொல்கிறார்.
பிறகு அண்ணாமலை என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு சத்யா கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல முத்து முடியாது என்று மறுக்கிறார். முத்து கெட்டவனாவே இருந்துட்டு போறேன். எப்பயும் மத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் தான் தண்டனை அனுபவிக்கணும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உள்ளே செல்கிறார். இதனால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
பிறகு மீனாவிடம் வந்து எதுக்கு நீ அப்பாகிட்ட வந்து சொன்ன எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா என்கிட்ட பேச வேண்டியதுதானே என்று சொல்ல மீனா யார் கிட்டயாவது சொல்லி அழ வேண்டும் அல்லவா என்று கூறுகிறார். அதுக்கு அப்பா கிட்ட சொல்லுவியா என்று முத்து கேட்க மீனா ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…