தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு எப்பவும் மவுசு அதிகம் தான். எத்தனை சீரியல்கள் புதிதாக வந்தாலும் மக்கள் அவற்றுக்கு நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தொலைக்காட்சிகள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன.
அண்மையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்ததனால் படப்பிடிப்பு இல்லாத எடிட்டிங், டப்பிங் போன்ற இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 22 நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என அரசு கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…