தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு எப்பவும் மவுசு அதிகம் தான். எத்தனை சீரியல்கள் புதிதாக வந்தாலும் மக்கள் அவற்றுக்கு நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தொலைக்காட்சிகள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன.
அண்மையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்ததனால் படப்பிடிப்பு இல்லாத எடிட்டிங், டப்பிங் போன்ற இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 22 நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என அரசு கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…