தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு எப்பவும் மவுசு அதிகம் தான். எத்தனை சீரியல்கள் புதிதாக வந்தாலும் மக்கள் அவற்றுக்கு நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தொலைக்காட்சிகள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன.
அண்மையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்ததனால் படப்பிடிப்பு இல்லாத எடிட்டிங், டப்பிங் போன்ற இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 22 நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என அரசு கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…