தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடிதான் வரவா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் அரசியல் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நடிகர் விஜய் நடித்திருந்த பெரும்பாலான படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் எதிர்காதவர்கள் இப்போது அவர் அரசியலுக்கு வர இருப்பதால் அவரது படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் படங்களை மட்டுமே எப்போதும் சுட்டிக்காட்டி வருவது ஏன் என்று தெரியவில்லை.
விஜயின் அரசியல் வருகை ஒரு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் விஜய் அரசியலுக்கு வருவது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஆபத்து இல்லை. சீமானுக்குத் தான் ஆபத்து என பிரச்சினையை கிளம்பி வருகின்றனர். எப்போதும் நானும் விஜயும் அடித்துக் கொள்ள மாட்டோம். இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்துப் போட்டியிடும். அதில் 20 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும். யாருடனும் கூட்டணி கிடையாது. என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…