தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.
இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி படமான இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை ரசிகர்களை அப்செட் ஆக்கிய உள்ளது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரத்குமாரிடம் விஜய் அரசியல் தலைவராக இருப்பதனால் தான் உச்ச நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க சொல்லியும் மேல்முறையீடு செய்கிறார்களா என்ற கேள்வியை கேட்டுள்ளனர் அதற்கு சரத்குமார் பதிலளித்துள்ளார்.
சென்சார் இந்த ஒரு படத்தை மட்டும் நிறுத்தல தொடர்ந்து நிறைய படத்தை தான் நிறுத்திக்கிட்டு இருக்காங்க இதுக்கு முன்னாடி அவர் நடிச்ச படத்திலிருந்து ஜெயலலிதா அம்மா முன்னாடி கை கட்டி நின்னார்ல்ல இது எல்லாம் பொலிட்டிக்கல் கிடையாது எல்லாத்தையும் பொலிட்டிக்கல் நினைக்கிற எண்ணத்தை மாத்தணும் என்று சொல்லி இருக்கிறார்.
சென்சார்ல இருந்து ஒரு விஷயம் கட் பண்ண சொல்றாங்கன்னா அதுல விஷயம் இல்லாம இருக்காது படம் ரிலீஸ் ஆகணும்னா எல்லாரும் எதிர்பார்க்கிறது தான் நானும் அந்த படத்தை ரிலீஸ் ஆகணும்னு தான் எதிர்பார்க்கிறேன் அதே மாதிரி பராசக்திக்கும் சில விஷயத்தை சொன்னாங்க அவங்க அத கட் பண்ணி ரி கரெக்ஷன் பண்ணி தான் இப்போ சென்சார் கொடுத்து இருக்கிறதா நான் கேள்விப்பட்டேன் இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…