samuthirakani latest post-goes-viral
90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான சமுத்திகனி நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \”உங்கள் மனதிற்காக தான் ‘நெறஞ்ச மனசு’ என்று தலைப்பு வைத்தேன். அந்த 72 நாட்கள் உங்களோடு இருந்தது, ஒரு மாபெரும் சக்தியோடு இருந்த மாதிரி இருக்கிறது. அந்த நாட்கள் இன்றும் பசுமையாக என் மனதில் இருக்கிறது. இன்று நீங்கள் இல்லை என்று சொல்கிறார்கள். என் மனது நம்ப மறுக்கிறார். என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பார். அவர் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் கேப்டன். உங்கள் நல் எண்ணமும் இந்த சமூகத்தின் மீது நீங்கள் வைத்த பார்வையும் எனக்கு தெரியும். அதை நாங்களும் முன்னெடுக்கிறோம் கேப்டன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கேப்டன்\” என்று பேசினார்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…