நரிக்குறவர் குடும்பத்தை ரோகிணி திரையரங்கில் அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்? திரையரங்கம் கொடுத்த விளக்கம்

சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றாக விளங்கி வரும் ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் தனது குழந்தைகளுடன் பத்து தல திரைப்படத்தை காண வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரோகினி திரையரங்கின் நிர்வாகம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்திருந்தது வைரலாகி வருகிறது, அதில் அவர்கள், “பத்து தல படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படங்களை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் வந்திருந்தவர்களில் 2 வயது, 6 வயது, 8 மற்றும் 10 வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க எங்கள் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த ஆடியன்ஸ் ஒன்றுகூடி அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என குரல் எழுப்பி கொந்தளித்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கும் வகையில், அந்த குடும்பத்தினரை படம் பார்க்க அனுமதித்தோம்” என அந்த அறிக்கையில் ரோகிணி திரையரங்கத்தில் நிர்வாகம் குறிப்பிட்டதுடன் அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் தியேட்டரில் அமர்ந்து பத்து தல படம் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

jothika lakshu

Recent Posts

சாட்சி சொன்ன கறிக்கடைக்காரர் மணி.. ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில்…

19 minutes ago

Oh Butterfly – Teaser

https://youtu.be/FUclfG9Pnlo?si=N9kuqZj8f7d2vZzg

7 hours ago

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

17 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

17 hours ago

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

'3 வித காதலை சொல்​லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…

17 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

17 hours ago