ramba-heartfelt-post-about-the-accident
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் தற்போது நடிகை ரம்பா கனடாவில் குழந்தைகளை ஸ்கூலிலிருந்து காரில் அழைத்து வரும்போது விபத்தில் சிக்கியதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவரும் மூத்த மகளும் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் இளைய மகள் மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிய வந்துள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து நடிகை ரம்பா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், நானும் எனது மகளும் தற்போது நலமாக இருக்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வச்சவபோல் உணருகிறேன். எனக்கு சொல்வதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…