Ram Charan’s bodyguard earns Rs.2 lakh per day
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், தனது ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும், தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற விழாவில் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் ராம் சரணின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் ராம் சரணின் பாதுகாவலராக செயல்பட்ட சர்வதேச தற்காப்புக் கலை வீரர் கெவின் குண்டா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ‘பெத்தி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கூட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு பணிக்காக கெவின் குண்டாவுக்கு ராம் சரண் ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் பாதுகாவலர்களில் ஒருவராக கெவின் குண்டா பேசப்பட்டு வருகிறார்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…