Ram Charan’s bodyguard earns Rs.2 lakh per day
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், தனது ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும், தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற விழாவில் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் ராம் சரணின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் ராம் சரணின் பாதுகாவலராக செயல்பட்ட சர்வதேச தற்காப்புக் கலை வீரர் கெவின் குண்டா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ‘பெத்தி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கூட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு பணிக்காக கெவின் குண்டாவுக்கு ராம் சரண் ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் பாதுகாவலர்களில் ஒருவராக கெவின் குண்டா பேசப்பட்டு வருகிறார்.
தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேரும் பசில் ஜோசப், அங்கே பல வருடங்களுக்கு முன்பு…
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா, தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி…
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன்,…
தமிழில் ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பாலா, தொடர்ந்து ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, ‘மஞ்சள் வெயில்’,…
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும்…
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]