rajarani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு எக்ஸாம் முடிந்து வீட்டுக்கு வந்த சந்தியா சரவணன் சிவகாமியை பார்க்க பூஜை ரூமுக்கு செல்ல பிறகு சிவகாமி வந்துட்டீங்களா எக்ஸாம் எப்படி எழுதின என கேட்டு விபூதி வைத்து ஆசீர்வாதம் செய்கிறார். அதன் பிறகு இந்த பேப்பரை திருப்பி வந்ததும் நீ போலீஸ் ஆகிடுமே என்னை கேட்க இல்லை இது முதல் பரிச்சை தான் இன்னும் ஒரு பரிட்சை இருக்கு அதுக்கு அப்புறம் இன்டர்வியூ இருக்கு என கூறுகிறார்.
பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது அர்ச்சனா ஆதியின் திருமணம் பற்றி பேச்சை எடுக்க ஆதி அதிர்ச்சியாகிறான். சரவணன் நீயும் பார்வதி போல யாரையாவது காதலிக்கிறியா என கேட்க ஆதி அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறான். பிறகு சிவகாமி சீமந்தம் முடிந்ததும் ஆதிக்கு பொண்ணு பாக்க தொடங்கணும் என கூறுகிறார். அதன் பிறகு அர்ச்சனா வெளியே அமர்ந்து கொண்டிருக்க ஆதி போன் பேசி விட்டு உள்ளே வரும்போது கல்யாணம் பற்றி பேச அந்த நேரத்தில் சந்தியா வருவதால் இருவரும் மழுப்பிக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றனர்.
பிறகு சந்தியா ரூமுக்குள் இருக்க சரவணன் சந்தியாவிடம் பேசிக்கொண்டே நெருங்கி சென்று முத்தமிட முயற்சி செய்ய கரண்ட் கட் ஆகி விடுகிறது. கரண்ட் போனாலும் பரவாயில்லை என மீண்டும் நெருங்க மயிலு விளக்கோடு உள்ளே ஓடி வருகிறார். கரண்ட் கம்பம் சாஞ்சு போச்சு காலையில தான் கரண்ட் வருமாம். அம்மா உங்களை காத்தோட்டமா தூங்க வெளியே வர சொன்னாங்க என சொல்கிறார். பிறகு மயிலு வெளியே போனது சரவணன் மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய திரும்பவும் மயிலு நீங்க இன்னும் வரலையா என உள்ளே ஓடி வருகிறார். பொண்டாட்டிக்கு நிம்மதியா ஒரு முத்தம் கொடு கொடுக்க முடியல என புலம்புகிறார் சரவணன். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…