ஆதியை அடித்த சரவணன்..குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சிவகாமி சந்தியாவை தத்தி தத்தி என திட்ட சந்தியா அழுது கொண்டே ரூமுக்குள் சென்று அப்பா அம்மா போட்டோவை பார்த்து புலம்பி கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சரவணன் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் நீங்க எதுக்கு அழறீங்க என சொல்ல அப்போது அர்ச்சனா அந்த பணத்தை எடுத்து வைத்து இருப்பது சந்தியாவே தான்.

அவளே தான் பணத்தை காணவில்லை என நாடகம் போடுகிறார் என சொல்ல சரவணனின் அப்பா போலீசில் புகார் அளிக்கலாம் என சொல்ல ஆதி அதெல்லாம் எதுக்கு என சத்தம் போடுகிறான். சிவகாமி போலீஸ் எல்லாம் போகக்கூடாது நான் ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன் என கூறுகிறார். இத பத்தி நீ என்ன நினைக்கிற ஆதி என சரவணன் கேட்க அதிர்ச்சியாகும் அவன் நான் என்ன சொல்றது அர்ச்சனா அண்ணி சொல்றதையே யோசித்துப் பார்க்கலாம் என சொல்ல சரவணன் ஆதியை அடித்து வெளுக்க அனைவரும் அவனைத் தடுக்கின்றனர்.

சிவகாமி சரவணனை தடுத்து அவரை அறைந்து உன் பொண்டாட்டியை சொன்னதும் உனக்கு அவ்வளவு கோபம் வருதா? அவனை எதுக்கு அடிக்கிற என சொல்ல சந்தியா பணத்தை திருடியது யாருன்னு எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க. அது சொன்னா நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் மறைச்சாங்க என சொல்லி அந்த ஐந்து லட்சம் பணத்தை திருடியது ஆதி தான் என்ற உண்மையை உடைக்கிறார்.

இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக சிவகாமி ஆதியை அறைந்து நீ தான் பணத்தை திருடினியா என கேட்க அவன் ஆமாம் என்று சொல்ல உடைந்து போகிறார். சரவணன் செந்தில் சிவகாமி ரவி என எல்லோரும் ஆதியை திட்டி அடிக்கின்றனர். சரவணன் இனிமே உனக்கு இந்த வீட்டில இடம் கிடையாது வெளியே போ என துரத்த ஆதி எல்லோரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறான்.

ஜெஸ்ஸி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் என சொல்ல அதுக்கு நீ உன் சொந்த காசுல வாங்கி கொடுக்கணும் இல்லனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே என சரவணன் ஆவேசமாக பேசுகிறார். சந்தியா தடுத்து நிறுத்தி இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க தாங்க மாட்டீங்கனு தான் நான் சொல்லல. அங்க ஜெஸ்ஸி வயித்துல குழந்தையோட நிச்சயதார்த்தம் வரை வந்து காத்துக்கிட்டு இருக்கா. இது எல்லாத்தையும் அப்படியே மறந்துவிடலாம் அது தான் இந்த குடும்பத்துக்கு நல்லது. ஆதியை நாம பேசி சரி பண்ணிக்கலாம் என சொல்ல சிவகாமி நீ இந்த வீட்டு மருமக இல்ல, நீதான் சரியான குடும்பத் தலைவி என பாராட்டுகிறார். என் வயித்துல பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


rajarani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

பிரான்சில் குடும்பத்துடன் மகிழும் அஜித் – ஷாலினி; வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…

1 day ago

“சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை” – மனம் திறந்த நடிகை சமந்தா!

திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…

1 day ago

‘சீயான் 63’ திரைப்படத்தில் இணைந்தார் சம்யுக்தா ஹெக்டே!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…

1 day ago

அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் விஜய்!

சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…

1 day ago

இரட்டைக் குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண் – உபாசனா தம்பதி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…

1 day ago

Love Oh Love Official Teaser

Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…

1 day ago