ஆதியால் அழும் சிவகாமி. சந்தியாவிற்கு காத்திருக்கும் அடுத்த டாஸ்க். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புதிய பைக் உடன் வரும் அதே இடம் பைக் வாங்க ஏது பணம் என சிவகாமி கேட்க எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு தனி குடித்தனம் ஆயிடுச்சு, இன்னமும் என்ன வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க. எல்லாத்துக்கும் கண்ணு தண்ணி விட்டு டிராமா பண்ணாதீங்க என சொல்லி உள்ளே செல்ல சிவகாமி அழுது புலம்புகிறார்.

உடனே ரவி, செந்தில் என எல்லோரும் ஓடிவந்து ஆதியை கேள்வி கேட்க ஜெசி அவர்களிடம் ஆதியை மன்னிப்பு கேட்டு சொல்ல ஆதி மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்து சரவணன் குடும்பத்தை கெடுக்க நினைத்து மரியாதையை இழந்த கருணாகரன் பரந்தாமனை சந்திக்க வந்து இந்த தேர்தலில் சரவணனை தோற்கடிக்க நான் எல்லாவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என சொல்கிறார்.

அடுத்து கருணாகரன் செந்திலுக்கு ஆதரவு தருவது போல ஊரெல்லாம் பேனர் வைக்க அதை பார்த்த சரவணன் குழுவினர் சரவணன் அழைத்துச் சென்று காட்ட அவர் செந்திலிடம் பேசுவதாக கூறுகிறார்.

அதன் பிறகு கௌரி மேடம் அடுத்ததாக நடக்க போகும் போட்டி படகு போட்டியை விட மிகவும் ஆபத்தான ஒன்று என கூறுகிறார். வனவிலங்குகள் நிறைந்த காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும். மேலும் அங்கு சமூக விரோதிகள் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் உங்களை தாக்கம் உட்படலாம் அதை எல்லாம் தாண்டி நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் பரந்தாமன் அர்ச்சனாவில் சந்தித்து செந்திலை ஜெயிக்க வைத்து சரவணன் மண்ணை கவ்வ வைக்க நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என சொல்லி கலப்பட எண்ணெயை சரவணன் கடையில் வைக்குமாறு சொல்லி கூறுகிறார். அர்ச்சனா உன் செந்தில ஜெயிக்க வைக்க இதை நான் செய்து முடிக்கிறேன் என உறுதி கொடுக்கிறார்.

அதன் பிறகு சரவணன் செந்திலை தனியாக அழைத்து சந்தித்து கருணாகரன் ஆதரவு உனக்கு தேவையா என கேட்க தானா போய் ஆதரவு கேட்கல அவர் பரந்தாமன் அண்ணனோட நண்பர் என்பதால் அவராக வந்து ஆதரவு தருவதாக சொன்னார் என சொல்ல அவன் ஆதரவுலதான் நீ ஜெயிக்கணுமா என சரவணன் கேட்கிறார். உடனே செந்தில் இப்போ புரியுது உனக்கு இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயம் வந்துருச்சு அதான் என்கிட்ட வந்து இப்படி பேசிட்டு இருக்க என செந்தில் சொல்ல சரவணன் ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

8 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

8 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

15 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

15 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

16 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

16 hours ago