சரவணனுக்கு நடக்கப்போகும் பாராட்டு விழாவை தடுக்க அர்ச்சனா போடும் திட்டம்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் அனைவரும் காலையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அப்போது வந்த சந்தியா அர்ச்சனாவை முறைத்து பார்த்தார். எவ்வளவு அசிங்கப்பட்டும் இன்னும் திருந்தல என மனதுக்குள் ஏற்றுக்கொள்கிறார். சந்தியா உழைத்து பார்ப்பதை பார்த்த பார்வதி என்ன அர்ச்சனா அண்ணிய அப்படி பாக்கறீங்க என கேட்க அர்ச்சனா குருமால எப்படி உப்பை அள்ளிப் போடுவது என்று சொல்ல செந்தில் அர்ச்சனாவை திட்டி அனுப்பி விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதாகக் கூறுகின்றனர். இதைக் கேட்டதும் வீட்டிலுள்ள அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதற்காக பத்திரிகையும் அடித்து விட்டதாக கொடுக்க அதைப் பார்த்து இன்னும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா ஏற்கனவே நான் செம காண்டுல இருக்கேன் வீட்ல இருக்கவங்க பாராட்டுனது போதாதுனு ஊர் ஜனங்க வேற இவரை பாராட்ட வேண்டுமா? அப்படி என்ன சாதித்து விட்டார்கள் என புலம்புகிறார். இந்த விழாவைக் நடக்க விடக்கூடாது இல்லனா சரவணன் சந்தியாவை போக விடாமல் தடுத்து நிறுத்தவும். எது பண்ணாலும் பண்ணுலனாலும் சந்தியாவை கட்டாயமாக தடுத்து நிறுத்த வேண்டும் என திட்டம் போடுகிறார்.

பிறகு சந்தியாவுக்கு அவருடைய அண்ணன் போன் செய்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தென்காசி வந்து செட்டில் ஆகப் போவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பா அம்மாவா இந்த வீட்டையே திரும்பவும் வாங்கி விட்டதாக சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட சந்தியா ரொம்ப மகிழ்ச்சி அடைகிறார். நான் இப்பவே நம்ப வீட்டுக்கு போய் சுத்தம் பண்ணி வைக்கிறேன் என சொல்கிறார்.

பிறகு இந்த விஷயத்தை தன்னுடைய மாமனார் மாமியாருடன் சொல்லி சந்தோஷப்படுகிறார். நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு சுத்தம் பண்ணி விட்டீர்கள் என சொல்ல சிவகாமியும் போயிட்டு வா என கூறி விடுகிறார். அதன் பிறகு நேராக சரவணனின் கடைக்குச் சென்று அவரிடம் இந்த விஷயங்களை சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு அங்கு வந்த ஒருவர் நீ எப்ப குழந்தை பெத்துக்க போறீங்க எனக் கேட்க சந்தியா வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

வீட்டிற்கு வந்த அவர் 15 நாட்கள் தங்குவதற்காக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அப்போது வந்த சரவணனிடம் அண்ணன் அண்ணியுடன் பத்து பதினைந்து நாள் நல்ல ஜாலியா இருந்துட்டு வரேனு என சொன்ன சரவணன் முகம் மாறுகிறது. எதுக்கு அவ்வளவு நாள், நாளைக்கே வந்துடுங்க என சொல்ல நான் இங்க வந்து மட்டும் என்ன பண்ண போறேன் என சந்தியா கூறுகிறார்.

அதன்பிறகு சரவணன் இது எடுக்க அது எடுக்கணும்னு நான் அடிக்கடி வீட்டிற்கு வர அது உங்களைப் பார்க்கத்தான். நீங்க காய்கறி வாங்கும் போது மொட்டை மாடியில் துணி காயும் போது என்ன கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 30 முறை உங்களை பார்த்து விடுவேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என சரவணன் செல்கிறார். பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. மாறி மாறி முத்தமிட்டுக் கொள்ள இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 18.02.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

11 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

11 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

14 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

14 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

14 hours ago