பரந்தாமனால் ஷாக்கான செந்தில். அதிர்ச்சியில் அர்ச்சனா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா துப்பாக்கி சூடு நடந்த விஷயத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்க அப்போது சரவணன் இடம் கெளரி மேடம் ஒரு போன் பண்ணி குடுங்க என சொல்ல சரவணன் போன் பண்ண கௌரி மேடம் எடுக்காமல் இருக்கிறார்.

அடுத்து சிவகாமி எல்லாரும் இருக்கும் போது அனைவரையும் அழைத்து இனி சந்தியா பயிற்சிக்கு போக வேண்டாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். சந்தியா சரவணன் சிவகாமியை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய இதுதான் என்னுடைய கடைசி முடிவு என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

இதையடுத்து செந்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பரந்தாமன் போன் செய்ய முதலில் செந்தில் எடுக்க முடியாமல் போகிறது. பிறகு மீண்டும் போன் வர செந்தில் எடுத்துப் பேச பரந்தாமன் என்னப்பா தேர்தல் முடிந்ததும் ஆளையே மறந்துட்டேன் கொஞ்சம் வந்துட்டு போ கணக்குப் பார்க்க வேண்டிய வேலை இருக்கு என சொல்ல செந்தில் நான் என்ன தலைவரே பண்ண போறேன் நீங்க பார்த்து சொன்னா எல்லாம் சரிதான் என சொல்கிறார்.

என்னதான் இருந்தாலும் ஒரு முறைனு ஒன்னு இருக்குல்ல வந்துட்டு போ என சொல்ல செந்தில் பரந்தாமனை சந்திக்க அவர் உனக்காக தேர்தலில் செலவு செய்த ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை என சொல்ல செந்தில் அதிர்ச்சி அடைகிறார். இதை கேட்டதும் செந்தில் அதிர்ச்சி அடைந்து என தலைவரே என்கிட்ட பணம் கேட்கிறீங்க என சொல்ல உன்கிட்ட கேட்காம வேற யார் கிட்ட கேட்பாங்க தேர்தல்ல ஜெயிச்சிருந்தா பரவாயில்லை, எவனுக்கோ ஒருத்தனுக்கு 50 லட்சத்தை தூக்கி கொடுக்க நான் என்ன முட்டாளா என கோபமாக பேசுகிறார்.

மேலும் செந்தில் கையெழுத்து போட்ட பத்திரத்தை காட்டி சீக்கிரம் பணத்தைக் கொடு இல்லனா இத வச்சு கேஸ் போடுவேன் அப்புறம் நீ காலம் முழுக்க ஜெயில்ல கம்பி எண்ண வேண்டியதுதான் என எச்சரிக்கிறார்.

அதன் பிறகு அர்ச்சனா மயிலுவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று குழந்தையை தூக்கி வந்து ரூமுக்குள் சென்று பால் கொடுக்கிறார். அப்போது எல்லோரும் வெளியே கூடிவிட அர்ச்சனா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். பிறகு ரவியும் சிவகாமியும் கடைக்கு கிளம்பிச் சென்று விட சந்தியா குழந்தையை கொஞ்சி விட்டு ரூமுக்குள் சென்று அர்ச்சனாவை பார்க்க போகிறார்.

குழந்தையையும் அர்ச்சனாவையும் மாத்தி மாத்தி பார்க்க அர்ச்சனா என்ன என்று கேட்க குழந்தையுடன் முகம் எங்கேயோ பார்த்து பதிந்த மாதிரியே இருக்கு என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja-rani-2 serial episode-update
jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

2 days ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

2 days ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

2 days ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

2 days ago