சரவணன் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. விருந்துக்கு வந்த பார்வதி ஏற்பட்ட நிலை .. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நான்கைந்து பேர் சேர்ந்து வேண்டிய அமைப்பு செய்யப்போகும் வேலையை வைத்து இந்த அரசாங்கமே நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சரியான ஆளை நம்முடைய புதிய தலைமை கைகாட்டி உள்ளது என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சரவணன் கடையில் வேலை பார்க்கும் செல்வா உள்ளே நுழைகிறார். இந்த அமைப்பின் முக்கிய புள்ளியாக செயல்படுவது தெரிய வருகிறது. இந்த தென்காசி திருவிழாவில் ஒருவர் மூலம் நாட்டு வெடிகுண்டை வைத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த போவதாக கூறுகிறார். அந்த ஆள் யார் என்பதை உங்களுக்கு பிறகு சொல்கிறேன் என கூறுகிறார். மேலும் தலைமை உங்களுக்கு சில பொருட்களை அனுப்பி இருப்பதாக கூறி ஒரு பையை செல்வத்திடம் கொடுத்து அனுப்புகின்றனர்.

அதன் பிறகு இந்த பக்கம் வீட்டில் பார்வதி பாஸ்கர் வருகைக்காக சிவகாமி என்னவெல்லாம் செய்யப் போகிறோம் எனும் சொல்லை இதைக் கேட்டு அனைவரும் வியந்து கொள்கின்றனர். ஹோட்டலை காட்டிலும் லிஸ்ட் பெரியதாக இருப்பதாக கூறுகின்றனர்.

பிறகு அர்ச்சனா சரவணன் கடைக்கு வந்து செல்வத்துடன் வெளியில் சென்று சில பொருட்களை வாங்கி வருமாறு சொல்ல செல்வம் அண்ணன் எங்கேயும் போகக்கூடாது என சொல்லி இருக்கிறார் எனக் கூறுகிறார். நான் அனுப்பினேன் நீ சொல்லு அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டார் என அனுப்பி வைக்கிறார் அர்ச்சனா. இந்த நேரத்தில் செல்வத்தில் பேக்கை எடுத்து ஆராய அது செல்வம் ரகசியமாக எடுத்து வந்த பேக் இருப்பதைப் பார்க்கிறார். அதில் பணம் பாஸ்போர்ட் என எல்லாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்த நேரத்தில் செல்வம் வந்துவிடுகிறார். இவ்வளவு நாளா சரவணன் மாமாவை ஏமாற்றிக்கிட்டு இருக்கியா என கேட்க இல்லை நான் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர் ஊரில் எனக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கு. மயிலுக்கு இதெல்லாம் தெரியாது.

இங்க ஸ்வீட் செய்ய கத்துக்க தான் வந்தேன். பிறகு வெளிநாடு சென்று கடை வைக்க உள்ளேன் என கூற அர்ச்சனாவும் அதை நம்பிக் கொண்டு சென்று விடுகிறார். பிறகு பாஸ்கரும் பார்வதியும் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கின்றனர். மார்க்கெட்டுக்குச் சென்று பூ வாங்கிக்கொண்டு பிறகு பார்வதி நான் அண்ணன் கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கி கொண்டு வருகிறேன் என செல்கிறார். பாஸ்கரும் சரி என அனுப்பி வைத்துவிட்டு பழங்களை வாங்க செல்கிறார்.

பார்வதி கடைக்கு வர கடையில் சரவணன் இல்லாத நேரத்தில் செல்வம் ரகசியமாக போன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் ஒரு முட்டாள் என்னை ஈஸியாக நம்பி விட்டான். இந்த திருவிழாவில் கோவிலில் வெடிகுண்டு வைக்க ஒரு பெண்ணை தேர்வு செய்திருக்கிறேன். அந்தப் பெண்ணும் இதே ஊர் தான். அதற்காக நான் எவ்வளவு தான் நடித்து நம்ப வைத்து இருக்கிறேன் தெரியுமா என பேசிக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியான பார்வதி நீ இவ்வளவு மோசமானவனா? இப்பவே அண்ணன்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு என கூறுகிறார். உடனே செல்வம் பார்வதியை அடித்து வாயில் துணியை கட்டி கை கால்களை கட்டி போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Raja Rani 2 Serial Episode Update 13.05.22
jothika lakshu

Recent Posts

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

7 hours ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

7 hours ago

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு – முழு விவரம்

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…

7 hours ago

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…

8 hours ago

தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்!

தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…

8 hours ago

VALAI Official Teaser

VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs

8 hours ago