சாமியாரை பார்க்கச் சென்ற அர்ச்சனா.. சிவகாமி சந்தியாவிற்கு கொடுத்த அதிர்ச்சி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் பார்வதியின் சிவகாமியின் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அர்ச்சனா நைசாக வெளியே ஓட பார்த்தார். இதை கண்டுபிடித்த சிவகாமி அர்ச்சனாவை கூப்பிட்டு எங்கே போற என கேட்க வாக்கிங் என கூறினார். கையில் என்ன சீட்டு என கேட்க அது சும்மா வெத்து சீட்டு குப்பையில் போட போகிறேன் என கூறினார். அதன் பின்னர் பார்வதியை அதை படிக்க சொல்ல அவர் அயன் பாக்ஸ் ஸ்விட்ச் ஆப் பண்ணவில்லை என உள்ளே ஓடி விடுகிறார். சிவகாமியின் பின்னாடி எழுந்து செல்ல அர்ச்சனா சாமியாரை பார்க்க ஓடி வந்து விடுகிறார்.

இந்தப்பக்கம் சந்தியா அப்பா அம்மா போட்டோ முன்பு உங்களுடைய கணவர் என்னால் நிறைவேற்ற முடியாது இந்த குடும்பத்திற்காக நான் அதை மறந்து விடுகிறேன் என கூறுகிறார். இந்த நேரத்தில் வந்த சரவணன் சிவகாமி சந்தியாவிடம் பேசி இருப்பதை அறிந்து அம்மா அப்படித்தான் சொல்வாங்கன்னு எனக்கு தெரியும். என்ன நடந்தாலும் உங்களுடைய கனவை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை என கூறுகிறார்.

அதன்பிறகு அர்ச்சனா சாமியாரிடம் மண்டியிட்டு தனக்கு ஆம்பிளப் பிள்ளை பிறக்க வேண்டும் அதற்கு ஆசிர்வாதம் பண்ணுங்க என கேட்க பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வைத்து ஆசீர்வாதம் பண்ண முடியாது என கூறி விடுகிறார். ஆம்பள புள்ள வேணும்னா பணம் கொண்டு வா என சொல்லிவிட வீட்டிற்கு வந்து அர்ச்சனை பணத்தை எப்படி தயார் செய்வது என யோசிக்கிறார். நகையை வைத்து விடலாமா என யோசிக்கிறார். ஆனால் ஏற்கனவே நமது வீட்டில் உள்ளவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் இது பெரிய பிரச்சினையாகி விடும் என அந்த முடிவை கை விடுகிறார்.

அதன்பிறகு செந்தில் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்து கொடுப்பார் அர்ச்சனா கொஞ்ச நேரம் யோசித்தேன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போகப்போகிறோம். அதனால் எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்கிறார். செந்தில் அர்ச்சனாவிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு இதனைச் சுற்றி எந்த கோவிலுக்கு போயிட்டு வர முடியுமோ போயிட்டு வா என சொல்லி விட்டு பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார்.

இந்தப் பக்கம் செந்தில் சந்தியாவின் அண்ணனை சந்தித்து நடந்ததை கூறுகிறார். நான் வேணும்னா வந்து அத்தை கிட்ட பேசவா எனக் கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக் கூறுகிறார். நான் திரும்பவும் பேத்தி எப்படியாவது அம்மாவை சம்மதிக்க வைக்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோடு நடக்கிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் சிவகாசியில் சந்தியாவிடம் மன்னிப்பு இது உங்க அப்பா அம்மா போட்டோவ இதைவிட மாற்றி வைத்து அதை எடுத்து ரூமில் வைத்து விடு என அந்த போட்டோவை காட்டி விடுகிறார். இதனால் சந்தியா கண்கலங்கி அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Raja Rani 2 Serial Episode Update 11.03.22
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago