கதாநாயகன் வெற்றி சென்னையில் உள்ள கார் கேரேஜில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியின் நண்பன் அந்த கேரேஜை நடத்தி வருகிறார். அந்த கேரேஜில் பல போதை பொருள் கைமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வெற்றி கதாநாயகியான அக்ஷராவை காதலிக்கிறார். இரவு அக்ஷராவுடன் ஊரை விட்டு செல்வதாக திட்டம் தீட்டுகின்றனர்.போதைப் பொருள் பறிமாற்றத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. காரணம் இல்லாமல் ஒரு கும்பல் வெற்றியை துரத்திக் கொண்டு இருக்கிறது. இந்த இரவு போராட்டத்தில் இருந்துவெற்றி எப்படி தப்பித்தார், வெற்றியை ஏன் அந்த கும்பல் துரத்துகிறது, அக்ஷயாவை கரம் பிடித்தாரா? என்பது படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்து இருக்கும் வெற்றி இப்படத்தில் குறைந்த வசனத்தை பேசி கண்களின் மூலமே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியான அக்ஷரா கொடுத்த வேலையைசிறப்பாக செய்துள்ளார். சைலண்டாக நடித்த முருகன் கொடுத்த வேலையை செய்துள்ளார்.
இயக்குனர் முருகன் ஒரு குறிப்பிட்ட இரவில் இரண்டு நபர்களை சுற்றி நடக்கும் ஒரு ஹைப்பர்லிங்க் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார். இரண்டு கதாபாத்திரங்களும்ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரே மாதிரியான கதை பின்னணி இருக்கிறது. ஹைப்பர் லிங்க் கதைக்களத்தை எடுத்து இருந்தாலும், படத்தின்
திரைக்கதையில் குழப்பி தள்ளியுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் வரும்வரை படத்தின் கதையை நாம் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகள் துண்டு துண்டாக வெட்டப் பட்டதுப் போல். அங்கும் இங்கும் விலகி நிற்கிறது. இந்த கதையை இன்னும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் இயக்கி இருந்தால் படம் மக்களால் ரசிக்க பட்டிருக்கக்கூடும்.
படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் விவேக் சரோ.
படம் முழுவதும் இரவில் நடப்பதால் அதை திறமையாக கையாண்டுள்ளார் அபிலாஷ்
லதா முருகன் பகலறியான் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…