ஓடிடி ரிலீஸ்… அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 10ல் 3 தமிழ் படங்கள்

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், புதிய படங்களை ஓடிடி-யில் நேரடியாக வெளியிட ஆரம்பித்தனர். அந்த வகையில் முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டு ஓடிடியில் வெளியாகி, அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி சூரரைப்போற்று 2-வது இடத்திலும், மூக்குத்தி அம்மன் 8-வது இடத்திலும், பொன்மகள் வந்தாள் 10வது இடத்திலும் உள்ளன. தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான தில் பேச்சரா படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதேபோல் 3வது இடத்தில் லுடோ, 4வது இடத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கிய லட்சுமி, 5வது இடத்தில் குஞ்சன் சக்சேனா, 6வது இடத்தில் குதா ஹாபிஸ், 7வது இடத்தில் குலாபோ சித்தாபோ ஆகிய இந்திப் படங்களும், 9வது இடத்தில் நானி நடித்த தெலுங்குப் படமான வி இடம் பிடித்துள்ளது.

Suresh

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

2 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

2 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

3 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

3 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

3 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago