New condition for theater owners
விஜய்யின் மாஸ்டர் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் பேசியதை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் லைசன்சை பிப்ரவரி 4-ந் தேதி இரவு வரை புதுப்பித்து தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.
அதற்கு பிறகு படத்தை தொடர விரும்புகிறவர்கள் அந்தந்த மாவட்ட வினியோகஸ்தர்களிடம் பேசுங்கள். அவர்கள் படத்தை தொடர தேவையானதை செய்து கொடுப்பார்கள். மாஸ்டர் படத்துக்கு இப்படித்தான் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்ற வாரம் வெளியான கபடதாரி படத்தை 30 நாட்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய படங்களுக்கு 30 நாட்களும், பெரிய படங்களுக்கு 50 நாட்களும் கேட்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற…
கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில்…