நந்தினிக்காக பூ வாங்கும் சூர்யா, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.ஆர் சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கோபமாக மேலே வந்து மாதவி மற்றும் சுரேகாவை கூப்பிட்டு ரூம்ல இருக்கிற பணம்,நகை எதுவுமே காணோம் என்னடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க உடனே மாதவி மற்றும் சுரேகா இருவரும் பதற்றமாக வந்து என்னுடைய 30 சவரன் நகை,ஐம்பதாயிரம் பணத்த காணுமா என்று மாதவி சொல்லுகிறார். சுரேகாவும் என்னோட ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் வாச்சும் இல்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு மாதவி நந்தினி பார்த்து தென்னை மட்டை இங்க வா என்று கூப்பிடுகிறார். வீட்ல இருக்குற பணம் நாங்க எதுவுமே காணோம் எங்க எடுத்துன்னு போய் ஒளிச்சு வச்சிருக்கேன் என்று கேட்க நந்தினி நீங்க சொல்லிதமா எனக்கு தெரியும் எனக்கு சத்தியமா தெரியாது என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு நீ பேசவே பேசாத நீ பேசினாலே எனக்கு கோப கோவமா வருது என்று சொல்லுகிறார். உடனே சுரேகா அன்னைக்கு இவ தங்கச்சி கூட நகை திருட பார்த்தால் இல்லமா நம்ம கரெக்டா வந்ததுனால தப்பிச்சோம் என்று சொல்ல சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தை அசிங்கமாக பேசுகிறார். மாதவி நந்தினி இடமும் உன்கிட்ட அவ்வளவு சொல்லிட்டுதானே போன நீ மட்டும் தான் இருக்க பத்திரமா இருன்னு சொல்லிட்டுதானே போன என்று கேட்க, நான் எந்த ரூமுக்குள்ளேயும் போகலாமா நான் எதையுமே பாக்கல என்று சொல்லுகிறார். நந்தினி அழுது கொண்டே இருக்க அழுவது நிறுத்திட்டு எங்க வச்சிருக்க என்று சொல்லு என்று கேட்டுக் கொண்டிருக்க அசோகன் வெளியே செல்கிறார்.

வீட்ல நீ மட்டும் தான் இருந்த உன்ன தான் கேட்க முடியும் என்று மாதவி சொல்ல உடனே அந்த இரண்டு ஏசி சர்வீஸ் பண்ண வந்தவர்கள் பற்றி நந்தினி யோசித்து நான் சொல்ல மறந்துட்டம்மா இரண்டு பேர் ஏசி சர்வீஸ் பண்றன்னு சொல்லி வந்தாங்க என்று சொல்ல சுரேகா போன மாசம் தான பண்ணாங்க என்று சொல்லிவிட்டு நீங்கள் ஏதாவது சொன்னீங்களாமா என்று கேட்கிறார் நான் எதுவும் சொல்லல என்று சுந்தரவல்லி சொல்ல சூர்யா சார் சொன்னதா சொல்லி வந்தாங்க என்று சொல்லுகிறார்.

சூர்யாவுக்கு எப்ப வீட்டு மேல அக்கறை இருந்திருக்கு என்று மாதவி சொல்ல சுரேகா உடனே சூர்யாவிற்கு ஃபோன் போட்டு ஏசி சர்வீஸ் வர சொன்னியா அண்ணா என்று கேட்கிறார் நான் எதுக்கு சொல்லப் போறேன் ஏசி வொர்க் ஆகலனா வெளியே ரூம் போட்டு தங்க போறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே சுரேகா அண்ணன் சொல்லலையா என்று சொல்ல, அவன் என்னைக்கு வீட்டு மேல அக்கறை பட்டு இருக்கான் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். மாதவி மற்றும் சுரேகா இருவரும் உன்னோட பேக்கை செக் பண்ணி பார்க்கிறோம் என்று சொல்ல தாராளமா பண்ணி பாருங்க என்று ரூமுக்கு கூப்பிடுகிறார் வாங்கம்மா என்று சுந்தரவல்லி கூப்பிட நான் வரல நீங்க போங்க என்று அனுப்பிவிட்டு அவர் கீழே சென்று விடுகிறார். பிறகு நந்தினியின் துணி மற்றும் பேகை கலைத்து போட்டு சுரேகா தேட இல்லாமல் இருப்பதால், உடனே சூர்யாவின் ரூம் ஃபுல்லாக தேடுகின்றனர். எதுவும் கிடைக்காததால் இவள கீழ கூட்டிட்டு வா கிச்சன்ல ஏதாவது பதுக்கி வைத்திருப்பாய் என்று சொல்லி கீழே அழைத்து செல்கின்றனர். என்ன கிடைச்சதா என்று கேட்க உள்ள ஃபுல்லா தேடிட்டோமா கிடைக்கல கிச்சன்ல தேடி பார்க்கிறோம் என்று சொல்ல கிச்சன்ல நானே தேடிட்டா இல்லை என்று சொல்லி சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். பேசிக்கொண்டே இருக்க போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டு இப்ப எதுக்கு போலீஸ் வருது யார் சொன்னது என்று கேட்க அசோகன் நான் தான் சொன்னேன் என்று சொல்லுகிறார். பேசிகிட்டு இருக்கும்போது அதுக்குள்ள எதுக்கு போலீஸ்க்கு போன் பண்ணீங்க குடும்பம் மானத்தை வாங்குவது என்றால் முதல் ஆலா இருப்பீங்க என்று திட்டி விட்டு எப்படியாவது போங்க என்று கோபமாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். அங்கே வந்த போலீஸ் இங்கு யார் மாதிரி இருந்தது என்று கேட்க மாதவியும் சுரேகாவும் நந்தினி தான் என்று சொல்லிவிடுகின்றனர். உடனே இவங்க யாரு என்று போலீஸ் கேட்க இந்த வீட்ல வேலை செய்ற வேலைக்காரி என்று சொல்ல வேலை செய்ற இடத்திலேயே திருடுறியா என்று கேட்டு பேசிக்கொண்டிருக்க ஒரு பெண் போலீஸ் நந்தினி அறைந்து விடுகிறார். சத்தியமா நான் எதுவுமே பண்ணல சார் என்று நந்தினி அழுது கொண்டே போலீஸிடம் சொல்ல எந்த திருடி உடனே ஒத்துப்பாங்க சத்தியம் தான் பண்ணுவாங்க என்று சொல்லி சொல்லுகின்றனர்.

நந்தினி எவ்வளவு சொல்லியும் போலீஸ் கேக்காமல் அவளை இழுத்து வருகின்றனர். நந்தினி எல்லோரிடமும் நான் எடுக்கல என்று கெஞ்ச யாரும் எதுவும் சொல்லாமல் அவரை வெளியே இழுத்து வருகின்றனர். அது நேரம் பார்த்து அருணாச்சலம் வர உடனே கை எடுங்க என்று சொல்லி திட்டுகிறார் யாரைக் கேட்டு இது மாதிரி பண்றீங்க என்று சொல்ல உங்க வீட்டு வேலைக்காரி நகையை திருடுனதா கம்ப்ளைன்ட் வந்துச்சு என்று சொல்லுகிறார் வேலைக்காரியா இவ எங்க வீட்டு மருமக என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே போலீஸ் உங்க வீட்டு சண்டைய என்கிட்ட சொல்லி விளையாடிட்டு இருக்கீங்களா என்று கேட்டு இந்த கேஸ் விஷயமா ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு போங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே அருணாச்சலம் நந்தினி இடம் உன் மனசு எப்படி பதறி இருக்கும் எனக்கு தெரியுமா மன்னிச்சிடு என்று சொல்லிவிட்டு எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு உனக்காக நான் எப்பவும் நிப்பேன் நீ இப்போ உள்ள போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மாதவி அசோகனை எதுக்கு போலீஸ் அவசரப்பட்டு போன் பண்ணுங்க அவ வீட்டை விட்டு போயிட்டா என்ன பண்றது என்று திட்டிக் கொண்டிருக்க நந்தினி மேலே வந்து நடந்ததை எல்லாம் யோசித்து கண்ணீர் விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் கடவுளிடம் இன்னும் ஒரு நாள் கூட இந்த வீட்ல இருக்க முடியாது என்று வேண்டிக் கொண்டு முடிவு எடுக்கிறார் நந்தினி.

மறுபக்கம் சூர்யாவின் நண்பன் மனைவி நீங்க கட்டின தாலிக்கு மதிச்சு உங்க வீட்ல இருக்கா, அந்தத் தாலிய தூக்கி எறிஞ்சுட்டு போறதுக்கு அவளுக்கு எவ்வளவு நேரம் ஆயிருக்கும் என்று சொல்ல சூர்யா யோசிக்கிறார். பிறகு பூக்கடைக்கு சென்று பூ அதிகமாக வாங்க, யாருக்கு தம்பி சாமிக்கா என்று கேட்கின்றனர் இல்லை என் பொண்டாட்டிக்கு என்று சொல்ல இதை நந்தினி பார்க்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

10 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 day ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 day ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

1 day ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

1 day ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

1 day ago