சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் ரிஜிஸ்டர் ஆபீஸ் இவர்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு அவங்க கையெழுத்து போட்டு இருக்கும்போது எப்படி ரிஜிஸ்டர் பண்ண முடியும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். சூர்யா அவங்க வாங்குன கையெழுத்து எதுக்கு நீ புரியுதா டாடி என்று சொல்லிவிட்டு சூர்யா அவங்களோட விருப்பமில்லாமல் போட்ட கையெழுத்து அது அவங்க கிட்டயே கேளுங்க என்று சொல்ல உங்ககிட்ட வற்புறுத்தி யாராவது கையெழுத்து வாங்கினார்களா என்று கேட்கிறார். உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் என்று அந்த பொண்ணு சொன்னா பத்திரத்த கிழிச்சு போட்டுட்டு பண்ணலாம் என்று சொல்ல அனைவரும் நந்தினியிடம் கல்யாணத்துக்கு விருப்பம் என சொல்லி என சொல்லிக் கொண்டிருக்கிறார் சுந்தரவல்லி வருகிறார். நீங்க அவங்கள கன்ப்யூஸ் பண்ணாதீங்க நீங்க அவங்களே யோசிச்சு முடிவு பண்ணட்டும் என்று சொல்ல எத்தனை வாட்டி யோசிச்சாலும் முடிவு ஒன்னு தான் என சுந்தரவல்லி வந்து நிற்கிறார்.

அந்த பொண்ணு ரொம்ப அப்பாவி அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என சுந்தரவல்லி சொல்லுகிறார். இந்த விவாகரத்தை கொடுத்துட்டா அவன் நிம்மதியா வாழ போய்டுவா இதில் ஏதாவது நான் பொய் சொல்றேன்னா என்று கேட்க நந்தினி அமைதியாக இருக்கிறார். இவ கல்யாணத்துல எச்ச இலை எடுக்க வந்தவ அவள புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சா அது கல்யாணம் ஆயிடுமா அந்த பொண்ணோட விருப்பத்தையே கேட்கல, அவளை கல்யாணம் பண்ணி என் கூட தான் இருக்கணும்னு போர்ஸ் பண்ணா அவ எப்படி இருப்பா, அவ அப்பாவியான பொண்ணு அவங்க திடீர்னு ரிஜிஸ்டர் பண்ண கூப்பிட்டாங்க அதனால பயந்து அவ இந்த டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு இருக்கா என்று சொல்லுகிறார். இதுல ஏதாவது பொய் இருக்கான்னு அவளையே கேளுங்க என்று சொல்லிவிட்டு சுதந்திரவல்லி நீயே சொல்லுமா நந்தினி என்று சொல்லுகிறார்.

அவ பலவீனத்தில் அடிக்கிறீங்களா, நீங்க யாரு உங்க உள் அர்த்தம் வெளியே அர்த்தம் எல்லாமே எல்லாருக்கும் தெரியும் என்று சூர்யா சொல்லுகிறார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத நந்தினி நான் சொன்னதையும் டாடி சொன்னதையும் மனசுல வச்சு முடிவெடு என்று சூர்யா சொல்லிவிட்டு எனக்கு ஒரு ஞாபகம் வந்திருக்கு நீ ஒரு விஷயத்துல உன்னால முடிவெடுக்க முடியலன்னா திருஓல சீட்டு போட்டு முடிவெடுப்பல்ல அப்படியே எடு என்று சீட்டை கொடுத்து கருப்பசாமி போட்டோவை காட்டுகிறார். இதுல எந்த முடிவா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு நீ நம்பல நான் சீட்ட கூட பிரிச்சு காட்டுறேன் என சொல்லி ஒரு சீட்டில் குங்குமம் ஒரு சீட்டில் விபூதியும் எடுத்துக்காட்டுகிறார்.

விபூதி வந்துட்டா என்னடா பண்ணுவ என்று அருணாச்சலம் கேட்க அவ ஊருக்கு போட்டோம் டாடி என்று சொல்லுகிறார் அப்ப குங்குமம் வந்தா என்று சுந்தரவல்லி கேட்க அடுத்த நிமிஷம் ரெஜிஸ்ட்ரேஷன் தான் என சூர்யா சொல்லுகிறார். நந்தினியும் சீட்டுக் குலிக்கிப் போட்டு எடுக்க குங்குமம் வருகிறது. உடனே அனைவரும் சந்தோஷப்பட்டு ரெஜிஸ்ட்ரேஷனுக்கான வேலையை பார்க்க சூர்யா நந்தினிக்கு மாலை போடுகிறார். சுந்தரவல்லி கடுப்பாகிறார். பிறகு நல்லபடியாக ரிஜிஸ்ட்ரேஷனும் நடக்கிறது. பிறகு சூர்யா நந்தினிக்கு குங்குமம் வைத்து விட அனைவரும் கிளம்பி விடுகின்றனர். நீங்க எப்படி மா இதுக்கு விட்டீங்க என்று கோபப்படுகிறார். எனக்கு ரொம்ப பயமா இருக்குமா நம்ம தோத்துக்கிட்டே இருப்போம் என்று தோணுது என்று மாதவி சொல்லுகிறார்.

சூர்யாவும் நந்தனியும் வந்து காரில் இறங்கியவுடன் உள்ள இருக்கிறவங்க ஓவரா ஆடுவாங்க அது எதுவுமே பேசாத நம்ம பாட்டு போயிட்டே இருக்கலாம் என்று சொல்ல ஏன் எப்பவுமே வழக்கம் போல ஆரத்தி எடுக்கலையா என்று சொல்லி சுந்தரவல்லி சொல்ல அதுவும் சூப்பர் ஐடியா டாடி ஏன் மிஸ் ஆச்சு கல்யாணம் என்று கூப்பிட சூர்யா அமைதியாக இரு என்று சொல்லுகிறார். அப்பாவும் பையனும் சேர்ந்து என்னை கோமாளியாக பாக்கறீங்களா என்று கேட்கிறார். நீ இந்த லெவலுக்கு போனா நான் அடுத்த லெவலுக்கு போவேன் பரவாயில்லையா என்று கேட்க நீங்க எங்க வேணா போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். ஏற்கனவே அவர் சூர்யாவுக்கு பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு மருமகளா இங்கதான் இருக்கா இதுக்கு எதுக்கு இவ்வளவு கோபப்படுற என்று அருணாச்சலம் கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா உங்க யாருக்கு புடிச்சாலும் புடிக்கலனாலும் நந்தினி இந்த வீட்டோட மருமகளா என்னோட பொண்டாட்டியா இந்த வீட்லதான் இருப்பா என்று சொல்ல விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு போர்ட் மீட்டிங் நடக்கப்போகுது அதுல ஒரு நிமிஷம் இங்கிலீஷ்ல பேச சொல்லு என்று சொல்ல சூர்யாவும் அவ்வளவுதானா இந்த சவால நான் ஏத்துக்குறேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரூமுக்கு வந்த நந்தினி தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க சார் என்னால இதெல்லாம் முடியாது என்னால் எனக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 26-08-25
jothika lakshu

Recent Posts

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

5 hours ago

Naan Dhaan King Lyric Video

Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…

5 hours ago

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

3 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

3 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

3 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

3 days ago