Moondru Mudichu Serial Promo Update 24-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தையும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி சூர்யாவின் சீட்டில் உட்கார சொல்ல நந்தினி நீங்க உட்காருங்க என்று சொல்ல, நந்தினி தயங்க சூர்யா மற்றும் விவேக் இருவரும் உட்காரச் சொல்ல நந்தினி நான் வீட்டுக்கு போகிறேன் என சொல்லுகிறார். விவேக் சரி போகப்போக சரியாயிடும் விடு மச்சான் என்று சொல்ல, அர்ச்சனா வெளியில் வந்து எல்லோரிடமும் நான் சொல்றத கொஞ்சம் கேக்குறீங்களா என்று கத்த யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். சத்தம் கேட்டு சூர்யாவும் அனைவரும் வருகின்றனர். இது சுந்தரவல்லி அம்மா காப்பாத்தி வச்சிருக்கிற பிசினஸ் சாம்ராஜ்யம் அதை புரிஞ்சிக்கிட்ட எல்லாருக்கும் நல்லது என்று சொல்லிவிட்டு அர்ச்சனா போக அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க அவ லூசு என்று சொல்லுகிறார்.
பியூன் தண்ணீர் அர்ச்சனாவிற்கு கொடுத்துவிட்டு நந்தினுக்கு ஜூஸ் எடுத்துக்கொண்டு வர யாருக்கு என்று கேட்க முதலாளி அம்மாவுக்கு என்று சொல்ல அர்ச்சனா கடுப்பாகிறார். ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து பியூன் கொடுக்க அர்ச்சனா அம்மாவுக்கு கொடுத்துட்டீங்களா என்று கேட்க அவங்களுக்கு தண்ணி கொடுத்தேன் என சொல்லுகிறார். உடனே அர்ச்சனாவிற்கு அந்த ஜூஸை எடுத்துக் கொண்டு வந்து நந்தினி கொடுக்க நீ பிச்சை போட்டு இந்த ஜூஸை நான் குடிக்கணுமா உன்ன மாதிரி பொறுக்கி திங்கிறவ நான் கிடையாது எடுத்துக்கிட்டு போ என்று சொல்லி மிரட்ட நந்தினியும் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். பிறகு மாதவி அசோகனுக்கு போன் போட நந்தினியை இந்த கம்பெனியில் தாங்குறாங்க என்று நடந்த விஷயத்தை சொல்லுகிறார். மாதவி கோபப்பட்டு அந்த அர்ச்சனா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா என்று கேட்க, அவ கோவத்துல என்ன பண்றதுன்னு தெரியாம என்னென்னமோ பேசிகிட்டு இருக்கா, அதிகாரமும் திமிரு ஓவரா பேசிக்கிட்டு இருக்கா என்று சொல்ல, அவகிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்னு என்று மாதவி சொல்லுகிறார்.
நீங்க சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ணி அர்ச்சனாவுக்கு அகைன்ஸ்ட்டா இருங்க என்று சொல்லுகிறார். உடனே சூர்யா ரூமுக்கு அசோகர் வந்தவுடன் இந்த ஆபீஸ்ல நீ என்னென்ன வேலை பார்க்கிற என்று கேட்கிறார். என்ன வேலை வேண்டுமானாலும் பாப்பேன் என்று சொல்ல, அப்போ நந்தினியை கன்வின்ஸ் பண்ணி அந்த சீட்டைல உட்காரவை என்று சொல்ல நந்தினி அந்த இடத்துல உட்கார ஒரு தகுதி வேணும் என சொல்லிவிட்டு நான் ஆபீஸை சுற்றி பார்க்கப் போறேன் என வெளியில் சென்று விட, சூர்யா அசோகனை நின்னுகிட்டு இருக்குற ஆள உட்கார வைக்க முடியல உனக்கு சார்புன்னு பேரா என்று கேட்கிறார். பியூன் எல்லோருக்கும் காபி எடுத்துக்கொண்டு வர நந்தினி வாங்கி எல்லோருக்கும் கொடுக்க நந்தினியை பாராட்டி பேசுகின்றனர். பிறகு இன்னொரு ரூமுக்குள் நந்தினி வர அந்த ரூம் கலைந்திருப்பதால் அதனை சுத்தம் செய்கிறார்.
நந்தினி சுத்தம் செய்வதை வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு எவ்வளவு சிம்பிளா இருக்காங்க என்று பாராட்டி பேசுகின்றனர். அர்ச்சனா அசோகனை கூப்பிட்டதாக சொல்லி சொல்ல அவரும் வந்து அர்ச்சனாவை சந்திக்கிறார். நீங்க இங்க என்ன வேலை செய்றீங்க என்று அர்ச்சனா கேட்ட, என்ன வேலை செஞ்சா உங்களுக்கு என்ன என்று கேட்கின்றார். நான் வேலை வாங்க வந்திருக்கேன் என்று சொல்ல நீங்க எந்த டிபார்ட்மெண்ட்ல வேலை வாங்குறீங்க என்று கேட்கிறார். இதை அப்படியே உங்க அத்தை கிட்ட சொல்லவா என்று சொல்ல நம்பர் வேண்டுமா என்று அசோகன் திமிராக பேசுகிறார். நான் விளையாட்டுக்கு சொல்லல நிஜமாதான் சொல்றேன்னு சொல்ல தாராளமாக சொல்லு என சொல்ல நான் உங்களை சஸ்பெண்ட் பண்றேன் என அர்ச்சனா சொல்லுகிறார்.
நீ சஸ்பெண்ட் பண்ணா அடுத்த கேபில போயி என் மாப்பிள்ளை கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிடுவேன் என்று சொல்ல கெட் அவுட் என அர்ச்சனா சொல்ல, தனக்குத்தானே பாராட்டிக் கொண்டு சென்று விடுகிறார். உடனே அசோகன் சூர்யாவிடம் வந்து என்ன அர்ச்சனா சஸ்பெண்ட் பண்றதா சொன்னார் வெச்சு கலாய்ச்சி விட்டு வந்துட்டேன் என்று சொல்ல சூர்யா சூப்பர் என்று சொல்லுகிறார். நீ கவலைப்படாத அவ ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்டா எப்படி ஓட விடுகிறேன் பாரு என்று சொல்லுகிறார். பியூன் என கூப்பிட்டுக் கொண்டே வர காது கேட்காமல் வந்ததால் அர்ச்சனா அவரை அறைந்து விடுகிறார். உடனே சூர்யா அர்ச்சனா மீது கோபப்பட்டு பேசுகிறார். அவருக்கு காது கேட்காது மிஷின் போடாம நீ நூறு வாட்டி கூப்பிட்டாலும் அவருக்கு கேட்காது அவர் எத்தனை வருஷமா இந்த கம்பெனியில் வேலை செய்கிறார் அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா பியூனை அடித்ததால் வேலை செய்பவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராடுகின்றனர். இதை இவ்வளவு பெரிய பிரச்சினையாக்கணுமா என்று நந்தினி கேட்க ஸ்டாப்ஸ் அடிச்சா சும்மா இருப்பாங்களா என்று கேட்கிறார். அனைவரும் வெளியில் போராட்டம் செய்ய, சுந்தரவல்லி வருகிறார்.
உங்க சைனிங் அத்தாரிட்டி வந்து இப்ப மன்னிப்பு கேட்கலனா இங்க மொத்த ஃபேக்டரையும் ஆஃப் ஆயிடும்னு சொல்றாங்க என்று சொல்ல சுந்தரவல்லி இடம் அர்ச்சனா நான் பியூனை கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன் அவர் திரும்பி பார்க்கவில்லை அதனால லேசா அடிச்சேன் அது தப்பா என்று கேட்க சுந்தரவல்லி ஆமா தப்பு தானே சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala
Diesel Official Trailer | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Rajini Gang Official Teaser | Rajini Kishen | Dwiwika | M.Ramesh Baarathi | Mishri Enterprises