பைசன் படப்பிடிப்பு குறித்து மாரி செல்வராஜ் அப்டேட் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன்,மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் மாரி செல்வராஜ்.
இவரது இயக்கத்தில் “வாழை” என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அனுபமா ,லால், பசுபதி, ரதிஷா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட மாரி செல்வராஜ், படப்பிடிப்பு 60% நிறைவடைந்து விட்டதாகவும் இந்த படம் முடிந்த கையோடு தனுஷை வைத்து படம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் படம் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பைசன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…