சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இது மாணவர்களுக்கான போராட்டம் என்பதால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஜோக்கர்ஸ். நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

இதற்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். உடனே சனம் ஷெட்டி, “இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை இருக்கிறது. நான் என்ன பேசுகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, “மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறித்தானே என்னை அழைத்தார்கள். ஜனநாயகத்துக்காக போராடுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்து மைக்கை பிடுங்கிவிட்டார்கள். இதுதான் ஜனநாயகமா?

பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவை வைத்துதான் போராடுகிறார்கள். இந்த பொறிக்குள் யாரும் விழுந்துவிட வேண்டாம்.

பேசுவதற்கான சுதந்திரத்தை வழங்காதவர்கள், சுதந்திரத்துக்காக போராடுகிறார்களா? இது ஒரு போலியான போராட்டம்” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “டெல்லியில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கு செல்லவில்லை. மாணவர்களுக்கு 100 சதவீதம் சல்யூட் அடிக்கிறேன். சோனம் வாங்சுக்குப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவரை காந்திக்கு நிகராக பார்க்கிறேன். மாணவர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது” என சனம் ஷெட்டி தெரிவித்தார்.

Suresh

Recent Posts

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

5 minutes ago

சான் டியேகோ காமிக்-கானில் ‘ராமாயணம்’ டிரெய்லர் வெளியீடு – இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…

56 minutes ago

நிர்வாணக் காட்சி படப்பிடிப்பில் பழுதான கேமரா – ஃப்ளோரன்ஸ் பியூ பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…

1 hour ago

அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…

1 hour ago

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…

2 hours ago

பிரம்மாண்ட ஆடி & பண்டிகை ஷாப்பிங் கொண்டாட்டம்! புதிய கலெக்ஷன்களுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வேலவன் ஸ்டோர்ஸ்

சென்னை: பண்டிகை கால ஷாப்பிங்கை முன்னிட்டு, சென்னை டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ், புத்தம் புதிய…

2 hours ago