Sanam Shetty’s Explosive Allegation
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இது மாணவர்களுக்கான போராட்டம் என்பதால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஜோக்கர்ஸ். நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.
இதற்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். உடனே சனம் ஷெட்டி, “இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை இருக்கிறது. நான் என்ன பேசுகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, “மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறித்தானே என்னை அழைத்தார்கள். ஜனநாயகத்துக்காக போராடுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்து மைக்கை பிடுங்கிவிட்டார்கள். இதுதான் ஜனநாயகமா?
பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவை வைத்துதான் போராடுகிறார்கள். இந்த பொறிக்குள் யாரும் விழுந்துவிட வேண்டாம்.
பேசுவதற்கான சுதந்திரத்தை வழங்காதவர்கள், சுதந்திரத்துக்காக போராடுகிறார்களா? இது ஒரு போலியான போராட்டம்” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “டெல்லியில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கு செல்லவில்லை. மாணவர்களுக்கு 100 சதவீதம் சல்யூட் அடிக்கிறேன். சோனம் வாங்சுக்குப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவரை காந்திக்கு நிகராக பார்க்கிறேன். மாணவர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது” என சனம் ஷெட்டி தெரிவித்தார்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…