பைசன் படப்பிடிப்பு குறித்து மாரி செல்வராஜ் அப்டேட் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன்,மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் மாரி செல்வராஜ்.
இவரது இயக்கத்தில் “வாழை” என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அனுபமா ,லால், பசுபதி, ரதிஷா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட மாரி செல்வராஜ், படப்பிடிப்பு 60% நிறைவடைந்து விட்டதாகவும் இந்த படம் முடிந்த கையோடு தனுஷை வைத்து படம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் படம் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பைசன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…