lyricist kapilan poetry written for daughter thoorigai
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக திகழ்பவர் தான் கவிஞர் கபிலன். இவருக்கு 28வயதில் தூரிகை என்ற மகள் இருந்தார். தூரிகையும் சினிமா துறையில் காஸ்டியூம் டிசைனராக ஜீ.வி.பிரகாஷ், சேரன் உள்பட திரையுலகினர் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைனராகவும், சில கான்சப்ட் ஷ¨ட்களிலும் பணியாற்றியிருக்கிறார். மேலும் பீயிங் வுமன் என்ற பிரபல இணைய இதழையும் நடத்தி வந்தார்.
இப்படி பிசியானவராக பணியாற்றி வந்த தூரிகை சில நாட்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருந்தது.
இந்நிலையில் கவிஞர் கபிலன் தனது மகளைப் பிரிந்து வாடும் வலிகளை கவிதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த கவிதைகள் தற்போது குமுதம் இதழில் தூரிகையின் புகைப்படத்துடன் மகள் கவிதை கபிலன் என்ற புத்தகத்தில் 28.9.22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனை புகைப்படங்களாக கவிஞர் கபிலன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…