ஈழத்து திரைப்பட இயக்குனரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை) இன்று அதிகாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார். அதன் விளைவாக தமிழ் தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார்.
பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
அத்துடன் ஈழத்தில் தயாரிக்கப்படும் பல்வேறு திரைப்படங்களை ஊக்கிவிப்பதுடன் அதில் பல பாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு டொராடோவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் தெரிவுசெய்யப்பட்ட எழில் குறுந்திரைப்படத்தில் இவரின் நடிப்பு அப்படத்திற்கு மிகவும் வலுச்சேர்த்தது.
2009 இன் பின்னர் முன்னால் போராளிகள் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பனைமரக்காடு திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார், இறுதி யுத்தம் வரை தமிழீழ மக்களுடன் பயணித்தவர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…