யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக பேசிய கார்த்தி.வைரலாகும் பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர் இதையடுத்து இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம்.

இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.  இந்நிலையில், நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏ.ஆர்.ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் என் குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, ஆனால் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்

jothika lakshu

Recent Posts

சல்மான் கானின் புதிய தோற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…

2 hours ago

“என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!” – அனுபமா பரமேஸ்வரனின் எமோஷனல் பதிவு வைரல்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

2 hours ago

“நடிகராக 3-வது தேசிய விருது… இயக்குநராக முதல் தேசிய விருது!” – நெகிழ்ந்த தனுஷ்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…

2 hours ago

3-வது தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ்… நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…

2 hours ago

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: தலைவர் ஆனார் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில்…

3 hours ago

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

5 days ago