இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் இருக்கும் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இதை குறித்து கங்கனா ரணவத் நேரடியாகவே பாலிவவுட் பிரபலங்களை பெயர் சொல்லி குற்றம் சாட்டி வருகிறார். இதனால் சுஷாந்த் தற்கொலை வழக்கில் முன்னணி நடிகை கங்கனாவும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது குளுமனாலி பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை கங்கனா அங்குள்ள வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வீட்டின் மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதற்காகவே சிலர் இப்படி செய்துள்ளதாகவும் நடிகை கங்கனா புகார் கூறியுள்ளார் கங்கனா.
இதுகுறித்து நடிகை கங்கனா விரிவாக கூறியுள்ளார் :
சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மகன் குறித்து கருத்து தெரிவித்து இருந்தேன். அதற்கான மிரட்டல் தான் இது. இனி பேசாதே என்பதற்கான எச்சரிக்கை தான் இது.
நான் இப்போது மும்பையில் இல்லை என்பதால், குளுமணாலியில் இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்கள்.
சுஷாந்த் சிங் கூட இப்படித்தான் மிரட்டப்பட்டு பயந்திருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, தொடர்ந்து கேள்விகளை நான் கேட்டுக்கொண்டே தான் இருப்பேன் என கூறியுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…