jailer movie shooting actor rajini will be attending again
கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் ரஜினியின் போர்ஷனுக்கான எடிட்டிங் முடிந்துவிட்டதால் அவர் டப்பிங் கொடுத்து வருவதாகவும் செய்திகள் சமீபத்தில் வெளியானது. மேலும் ஜெயிலர் படத்திற்காக ஒரு பாடலுக்கு ரிகர்சல் செய்து வருவதாக போட்டோவை தமன்னா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.
ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அதற்காக ரஜினியிடம் நெல்சன் 4 அல்லது 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…