தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள்.

இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில், துபாயில் இருந்து சட்டவிரோதமாக 127 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரு.102 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் தனது மகள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும், அவரது கைது சட்டவிரோதமானது என்பதால், அதற்கு தடை விதிக்கும்படியும், ரன்யா ராவின் தாய் ரோகினி மற்றும் தருணின் தாய் ரமா ராஜு ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அனு சிவகுமார் மற்றும் விஜய்குமார் ஏ.பட்டீல் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அப்போது ரன்யா ராவ் தரப்பில் ஆஜரான வக்கீல், ரன்யா ராவ் கைது விவகாரத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது மனுதாரர் வீடியோ எடுத்ததையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்வதுடன், அவரது கைதுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதுபோல், தருண் தாய் தரப்பில் ஆஜரான வக்கீலும் வாதிட்டார். பின்னர் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ரன்யா ராவுக்கு வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவை வழங்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் தங்கம் கடத்தியது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருப்பதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது. மேலும் அவர்கள் மீது ‘காபிபோசா’ சட்டம் அமலில் இருப்பதால், ஜாமீன் கிடைத்தாலும் அவர்களால் ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அதனால், இந்த ஆட்கொணர்வு மனுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரன்யா ராவ், தருண் ஆகியோரின் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்

Gold smuggling case.. Actress Ranya gets one year in jail..! Bangalore court orders action..!
dinesh kumar

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

8 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

8 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

8 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

9 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

11 hours ago