நடிகர் சிவகுமார் மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் அவதூறு வழக்கு!

திருமலை வெங்கடேஸ்வர கோவிலில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளை அவமதித்துப் பேசினார் என மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து நடிகர் சிவகுமார் மீது ஆந்திரப் பிரதேச காவற்துறை வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது.

நடிகர் சிவகுமார் மீது அவதூறு வழக்கு – திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் குறித்து பொய்ப்பிரச்சாரம் செய்கிறாராம்

நடிகர் சிவகுமார் சில காலத்துக்கு முன்னர் பேசிய பேச்சொன்றைக் காரணம் காட்டி தமிழ் மாயன் என்னும் பெயரில், திருப்பதி வெங்கடேஸ்வர கோவிலின் பக்தர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 29, 2020 அன்று இவ்வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இப் பேச்சில் நடிகர் சிவகுமார் நான்கு நாட்கள் பாம்பு போல் வளைந்து போகும் வரிசையில் நின்று ஒருவரை, வரிசையில் நிற்காமலேயே கடவுளைத் தரிசிக்க வல்ல ஒரு பணக்காரருடன் ஒப்பிட்டு கதையொன்றைக் கூறியிருந்தார் என அறியப்படுகிறது. இப் பேச்சின் காணொளி ஒன்று கடந்த சனியன்று சமூகவலைத் தளங்களில் பிரசுரமாகியிருந்தது.

இந்துக் கோவில்களில் சிற்பிகளை நடத்தும் முறை மற்றும் சில சாதியினரைக் கோவிலினுள் அனுமதிக்காமை போன்ற சடங்குகளை சிவகுமார் கடுமையாக விமர்சித்துக் கூட்டமொன்றில் பேசியிருந்தார்.

“1006 ஆம் ஆண்டிலிருந்து 1010 வரை தஞ்சாவூர் கோவிலைக் கட்டுவதற்கு 1000 த்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் பணிபுரிந்தார்கள். ஒரு சிற்பி ஆறு வருடங்களாகக் கல்லின் மேல் ஏறியிருந்து அதைப் பொழிந்து சிவலிங்கமாக்குகிறார். அச் சிவலிங்கம் கர்ப்பக்கிரகத்துள் வைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்படும்போது அதை வழிபட அச் சிற்பி உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இது பொய்யென்று நினைக்காதீர்கள். அச் சிற்பியின் 12 வது சந்ததியினரில் ஒருவர், தான் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் எனினும், தன்னை இப்போதும் உள்ளே அனுமதிப்பதில்லை என என்னிடம் கூறினார். ” என சிவகுமார் அப்பேச்சில் கூறுகிறார்.

இது உண்மையல்ல எனவும், நடிகர் சிவகுமார் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

admin

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

12 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

12 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

12 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

12 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

12 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

13 hours ago