ethir-neechal serial marimuthu-about-ajith-kumar
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அஜித்துடன் இணைந்து பணியாற்றிய பலரும் அவர்கள் அளித்த பேட்டியில் அஜித்தின் குணநலன்கள் பற்றி பேசி வருவது வழக்கம். அந்த வகையில் அஜித்துடன் ஆசை உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார்.
அஜித்திடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம் அவருடைய தாராள குணம் மட்டும் தான். அவர் ஆசை படத்தில் நடிக்கும் போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். இன்று 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் ஆனால் இரண்டு அஜித்திற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
அன்று முதல் இன்று வரை அதில் தான் சம்பாதித்த பணத்தை வருங்காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததில்லை. இப்போ வரைக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அனைவருக்கும் பலவிதமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
அவ்வளவு ஏன் அஜித்தின் திருமணத்திற்கு பிறகு கூட அவருடைய இந்த குணத்தை ஷாலினியால் மாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார். மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…