Controversy erupted over A.R. Rahman's speech!
ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறும்போது, ‘கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது.
படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தென்னிந்தியாவில் இருந்து இந்திக்குச் சென்று நிலைத்து நின்ற முதல் இசையமைப்பாளர் நான்தான். இளையராஜா அங்கு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டது திருப்தியான அனுபமாக இருந்தது. மணிரத்னத்தின் ‘ரோஜா’ (1992), ‘பம்பாய்’ (1995), ‘தில் சே’ (1998) படங்களுக்கு அமைத்த இசை பிரபலமானாலும், சுபாஷ் காய்யின் ‘தால்’ (1999) படம்தான் என்னை வட இந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் அறிய வைத்தது.
நான் ஒருபோதும் இந்தி பேசியதில்லை. தமிழுடன் எங்களுக்கு அப்படி ஒரு பிணைப்பு இருக்கிறது. ஆனால் அப்போது சுபாஷ் கய், ‘உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் இங்கு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அவரிடம் நான், இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது கற்றுக்கொள்கிறேன் என்றேன். இவ்வாறு ரகுமான் கூறியிருந்தார்.
இதில் பாலிவுட்டில் மத பாகுபாடு இருப்பதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பிரபல பாடகர்கள் ஷான், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.
ஷான் கூறும்போது, ‘இந்தி சினிமாவில் மத ரீதியான விஷயஙகள் இருப்பதாக நினைக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுபான்மையினராக இருக்கும் நமது மூன்று (சல்மான், ஷாருக்கான், அமிர்கான்) சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறும்போது, ‘நான் அப்படி உணர்ந்ததில்லை. மத ரீதியான பிரச்சினை இருப்பதாக நினைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இவர்களைப் போலவே பலரும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…