Changes can never be stopped - Suriya
நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. ஓடிடி தளங்களில் அதிக படங்களை வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு சூர்யா பதில் கூறும்போது, ‘சரவணன் சூர்யாவாக மாறியது தியேட்டர்களில் என்னைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் கொடுத்த ஆசீர்வாதம் தான்.
கொரோனா நேரத்தில் மொத்தத் தொழிலாளர்களும் முடங்கிப்போய் விட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் போய் விட்டது. ஒரு படம் எடுத்தால் முந்நூறு தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு படங்களை எடுத்திருக்கிறேன். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆறாயிரம் குடும்பங்கள் பலனடைந்திருக்கிறார்கள். தாங்கள் எப்படி வாழ நினைத்தார்களோ அப்படி வாழ்ந்தார்கள்.
ஓடிடி என்பது நிரந்தரமாக இருக்கப்போகும் ஒன்று. மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது ஒரு தலைமுறையே மாறுகிறது. அந்த மாற்றத்தைப் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். தியேட்டர்களில் வரக்கூடிய கதைகள் படமாகிக் கொண்டிருக்கிறது. வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் கொண்டாட்டமாக இருக்கும்’ என்றார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…