Categories: Movie Reviews

கேப்மாரி திரைவிமர்சனம்!

ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.

அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் – வைபவி – அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜெய்பலரும் விரும்பும் ஒரு லவ்ஹீரோ. ஆனால்இப்படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாகமாறிவிட்டார்.ஐடிஊழியராக இருக்கும் அவருக்குபீர் என்றால் உலகத்தையே மறந்துபோய்விடும்.வழிபயணத்தில்சந்தித்த ஹீரோயின் அவரின்வாழ்க்கைத்துணையாகவேமாறிப்போகிறார்.

முதலிரவில்அவருக்கு ஒரு இக்கட்டானகண்டிசன்.இதற்காகஅந்தஒன்றைவாங்க அவர் வண்டி எடுத்துசுத்த கடைசியில் வேறொருபிரச்சனையில் சிக்க படம்பார்ப்பவர்களை மிகவும் சிரிக்கவைக்கிறது.

பலஇடங்களில் அவர் பேசும் வசனங்கள்இரட்டை அர்த்தம் கொண்டதாகஇருக்கிறது.படத்தில்ஹீரோ, ஹீரோயின்இருவருக்கும் மிக நெருக்கமானகாட்சிகள்,படுக்கையறைகாட்சிகள் என நீண்டு கொண்டேசெல்கிறது.

ஹீரோயின்வைபவி ஒரு அப்பாவி பெண் போல.பிரச்சனைகள்அனைத்தும் தெரிந்த பின் ஜெய்யைவிட்டுக்கொடுக்கமுடியாமல்திணறும் காட்சிகள் பெண்களின்மனநிலைக்கே உரியது.பலபடங்களில் நடித்துள்ள இவர்இப்படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டியுள்ளார்.நடிப்புஓகே. ஆனால்ஓவர் ரொமான்ஸ்க்குள் தள்ளப்பட்டபரிதாபம்.

பலமனங்களை கவர்ந்த நடிகை அதுல்யாஇப்படத்தில் இதுவரை இல்லாதவேடத்தில் நடித்துள்ளார்.இவராஇப்படி என சிலருக்கு தோன்றலாம்.இவரின்வசனங்களிலும் இரட்டை அர்த்தம்கலந்திருக்கும்.

படத்தில்காமெடிக்கு தேவதர்ஷினி,சத்யன்மற்றும் இசையமைப்பாளர்சித்தார்த் (நடிகராக)சிலர்இருக்கிறார்கள்.பெண்களேஅந்தரங்க விஷயங்களை ஓப்பனாகபேசிக்கொள்கிறார்கள்.

இயக்குனர்சந்திரசேகர் பல வருடங்களுக்குபின் சினிமாவில் ஒரு படத்தைகொடுத்துள்ளார்.அவருக்குஇது 70 வதுபடம். இந்தவயதில் இப்படி ஒரு படமா என்றகேள்வி பலருக்கும் வரலாம்.

திருமணவாழ்க்கையில் பாலியல் உறவும்ஒரு அங்கம் என காமசூத்ராவைதழுவி அழுத்தி சொல்கிறார்இயக்குனர்.கிளைமாக்ஸில்ஏதோ சில விஷயங்கள் கதையுடன்பொருந்தவில்லையோ என்ற கேள்வி?

சித்தார்த்விபின் இசையமைப்பில் பாடல்கள்ஓகே ரகம் ஆனாலும் மனதில்ஒட்டாமல் போய்விடுகிறது.அனிருத்குரலில் 2பாடல்கள்.அதீதமானபாடலால் படம் நீளமாக தெரியலாம்.

திருமணவாழ்வில் பெண்களின் எதிர்பார்ப்பைஅழுத்தி சொன்னது.

இண்ட்ரவலுக்குமுன்பே மூன்று பாடல் கொஞ்சம்போர்.

ரொமான்ஸ்ஓவராக திணத்திருப்பது போலஒரு ஃபீல்.

பெண்களுக்குமன திருப்தி இல்லாமல் போகலாம்.

மொத்தத்தில் ‘கேப்மாரி’ ரசிக்க வைக்கிறான்.

admin

Recent Posts

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

14 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

14 hours ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

15 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

15 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

15 hours ago

அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

15 hours ago