Categories: Movie Reviews

கேப்மாரி திரைவிமர்சனம்!

ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.

அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் – வைபவி – அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜெய்பலரும் விரும்பும் ஒரு லவ்ஹீரோ. ஆனால்இப்படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாகமாறிவிட்டார்.ஐடிஊழியராக இருக்கும் அவருக்குபீர் என்றால் உலகத்தையே மறந்துபோய்விடும்.வழிபயணத்தில்சந்தித்த ஹீரோயின் அவரின்வாழ்க்கைத்துணையாகவேமாறிப்போகிறார்.

முதலிரவில்அவருக்கு ஒரு இக்கட்டானகண்டிசன்.இதற்காகஅந்தஒன்றைவாங்க அவர் வண்டி எடுத்துசுத்த கடைசியில் வேறொருபிரச்சனையில் சிக்க படம்பார்ப்பவர்களை மிகவும் சிரிக்கவைக்கிறது.

பலஇடங்களில் அவர் பேசும் வசனங்கள்இரட்டை அர்த்தம் கொண்டதாகஇருக்கிறது.படத்தில்ஹீரோ, ஹீரோயின்இருவருக்கும் மிக நெருக்கமானகாட்சிகள்,படுக்கையறைகாட்சிகள் என நீண்டு கொண்டேசெல்கிறது.

ஹீரோயின்வைபவி ஒரு அப்பாவி பெண் போல.பிரச்சனைகள்அனைத்தும் தெரிந்த பின் ஜெய்யைவிட்டுக்கொடுக்கமுடியாமல்திணறும் காட்சிகள் பெண்களின்மனநிலைக்கே உரியது.பலபடங்களில் நடித்துள்ள இவர்இப்படத்தில் கூடுதல் கவர்ச்சிகாட்டியுள்ளார்.நடிப்புஓகே. ஆனால்ஓவர் ரொமான்ஸ்க்குள் தள்ளப்பட்டபரிதாபம்.

பலமனங்களை கவர்ந்த நடிகை அதுல்யாஇப்படத்தில் இதுவரை இல்லாதவேடத்தில் நடித்துள்ளார்.இவராஇப்படி என சிலருக்கு தோன்றலாம்.இவரின்வசனங்களிலும் இரட்டை அர்த்தம்கலந்திருக்கும்.

படத்தில்காமெடிக்கு தேவதர்ஷினி,சத்யன்மற்றும் இசையமைப்பாளர்சித்தார்த் (நடிகராக)சிலர்இருக்கிறார்கள்.பெண்களேஅந்தரங்க விஷயங்களை ஓப்பனாகபேசிக்கொள்கிறார்கள்.

இயக்குனர்சந்திரசேகர் பல வருடங்களுக்குபின் சினிமாவில் ஒரு படத்தைகொடுத்துள்ளார்.அவருக்குஇது 70 வதுபடம். இந்தவயதில் இப்படி ஒரு படமா என்றகேள்வி பலருக்கும் வரலாம்.

திருமணவாழ்க்கையில் பாலியல் உறவும்ஒரு அங்கம் என காமசூத்ராவைதழுவி அழுத்தி சொல்கிறார்இயக்குனர்.கிளைமாக்ஸில்ஏதோ சில விஷயங்கள் கதையுடன்பொருந்தவில்லையோ என்ற கேள்வி?

சித்தார்த்விபின் இசையமைப்பில் பாடல்கள்ஓகே ரகம் ஆனாலும் மனதில்ஒட்டாமல் போய்விடுகிறது.அனிருத்குரலில் 2பாடல்கள்.அதீதமானபாடலால் படம் நீளமாக தெரியலாம்.

திருமணவாழ்வில் பெண்களின் எதிர்பார்ப்பைஅழுத்தி சொன்னது.

இண்ட்ரவலுக்குமுன்பே மூன்று பாடல் கொஞ்சம்போர்.

ரொமான்ஸ்ஓவராக திணத்திருப்பது போலஒரு ஃபீல்.

பெண்களுக்குமன திருப்தி இல்லாமல் போகலாம்.

மொத்தத்தில் ‘கேப்மாரி’ ரசிக்க வைக்கிறான்.

admin

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

4 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

4 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

4 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

4 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

4 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

4 days ago