சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இவரின் மர்ம மரணம் குறித்து தற்போது வரை சிபிஐ விசாரித்து வருகிறது.
சுஷாந்த் சிங்குக்கு தெரியாமலேயே அவருக்கு போதைப் பொருள் கொடுத்து மனநிலை பாதிக்க செய்ய முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் இளம் நடிகை சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உட்பட நடிகைகள் பலர், கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பார்ட்டி ஒன்றில், போதைப் பொருள் குறித்து ‘வாட்ஸ் அப்பில்’ உரையாடியுள்ள உண்மைகள் அம்பலமானது.
இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகைகள் தீபிகா, சாரா, ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்மன் அனுப்பினர்.
அதன்படி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஆஜரானார். அவரிடம் மும்பை உள்ள பிரபல அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் முன் பல மணி நேரம் தீவிர விசாரணை நடந்து வந்துள்ளது. அப்போது, தனது மேலாளருடன் போதைப் பொருள் குறித்து உரையாடியதாக தீபிகா படுகோன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இளம் நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடம் பிரபல அலுவலகம் ஒன்றில் தனியாக விசாரணை நடந்தது. அப்போது, முன்னணி கம்பெனியில் முக்கிய நிர்வாகிகளுடன் சாரா உட்பட பலர் போதைப் பொருள் குறித்து பேசியதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி தற்போது இந்திய திரையுலகியே அதிரவைத்து வருகிறது. மேலும் இன்னும் போதை பொருளை பயன்படுத்தி வரும் சில நடிகர், நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…