பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு,கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன. பாகற்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்.
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.
உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கும்
கல் அடைப்பு மற்றும் மூல நோய் உள்ளவர்கள் பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் அந்த நோயை குணமாக்கலாம். மற்ற எந்த உடல் குறைபாடு காரணமாக மாத்திரை எடுத்து வந்தாலும் அந்த மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பாகற்காயை சாப்பிடலாம்.
பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.
பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.
தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேரும் பசில் ஜோசப், அங்கே பல வருடங்களுக்கு முன்பு…
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா, தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி…
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன்,…
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், தனது ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனாக…
தமிழில் ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பாலா, தொடர்ந்து ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, ‘மஞ்சள் வெயில்’,…
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும்…