ஹேமாவால் பாரதி எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா லட்சுமிக்கு ஹேமா தன்னுடைய தங்கச்சி என்ற உண்மை தெரிந்து விட்டதாக சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். எப்படி தெரிந்தது என கேட்க கண்ணம்மா நடந்த விஷயத்தை சொல்ல பிறகு சரி விடு பார்த்துக்கலாம் என கூறுகிறார்.

அடுத்ததாக அகில் அஞ்சலிக்கு தன்னை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லி எமோஷனலாக பேசுகிறார். பிறகு கண்ணம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோருக்காவும் சௌந்தர்யா வீட்டில் சமையல் செய்ய பாரதி ரொம்ப பசிக்குது என சொல்ல பிறகு எல்லோரையும் கூப்பிடுங்க என சொல்ல எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்கின்றனர். என்ன சாப்பாடு என கேட்க சௌந்தர்யா உப்புமா என சொல்ல பாரதியும் லட்சுமியும் அதிர்ச்சடைகின்றனர். இதுக்கு தீவிரவாதி கிட்ட மாட்டி செத்தே போய் இருக்கலாம் என பாரதி நக்கல் அடிக்கிறார்.

அதன்பிறகு கண்ணம்மா உப்புமா ஒன்னும் கிடையாது வெஜ் புலாவ் செஞ்சு இருக்கேன் என அனைவருக்கும் பரிமாறுகிறார். எல்லோரும் சாப்பிட்டு கண்ணம்மாவின் சமையலை பாராட்டுகின்றனர். சௌந்தர்யா பாரதியிடம் இருக்கும் மாற்றத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார். பிறகு பாரதியிடம் இப்பயாவது கண்ணம்மா உன் மேல வச்சிருக்க அன்பையும் காதலையும் புரிந்துகொள். நான் உன்னை அவளோட சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தல ஆனா யோசிச்சு நல்ல முடிவா எடு என சொல்ல பாரதி யோசிக்கிறான்.

பிறகு கண்ணம்மா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஹேமா சாமியிடம் நான் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி இங்கேயே இருக்கணும்னு வேண்டிக்குவேன் என சொல்ல பாரதி இதை கேட்டு இன்னும் யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன்…

1 hour ago

செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை…

2 hours ago

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

18 hours ago

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

1 day ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago