பாரதிக்கு மாலை மரியாதை செய்த ஊர் பொதுமக்கள். மகிழ்ச்சியில் பாரதி. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கணேசன் பாரதி செய்த உதவியை பற்றியும் ஊர் மக்கள் இதுவரை ஊரை விட்டு ஒதுக்கி வந்த விஷயம் பற்றியும் பேசி பாரதியை இனி இந்த ஊரில் எதுக்கு இருக்கணும் வாங்க போகலாம் என கூப்பிடுகிறார். பாரதியின் இதுவரைக்கும் நான் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சலாக இருந்திருந்தால் என்னால் ஏதாவது தொந்தரவு இருந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பேசுகிறார்.

இனிமேலும் நான் இந்த ஊர்ல இருந்து உங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் என சொல்லி கிளம்ப ஊர் பெரியவர்கள் மனம் மாறி பாரதியை எங்க ஊர் பிள்ளையாக தத்து எடுத்துக் கொள்கிறோம் என சொல்ல பாரதி சந்தோஷப்படுகிறார். அடுத்து பாரதிக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றனர். வந்ததிலிருந்து பட்டினி போட்டு விட்டோம் வாய்க்கு ருசியா யாராவது ஏதாவது சமைக்க போடுங்க என ஊர் தலைவர் சொல்ல பாரதி இந்த வீட்டிலிருந்து சாப்பாடு வந்தால் நல்லா இருக்கும் என கூற கண்ணம்மாவை சென்று சமைக்க சொல்கின்றனர்.

பிறகு தாமர நாங்க சமைச்சு போடுறோம் என்ன சொல்லி கண்ணம்மாவை கூட்டிக் கொண்டு சென்று சமையல் வேலைகளை பார்த்து பிறகு அனைவரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுகின்றனர். கண்ணம்மா கையால் சாப்பிட்ட சந்தோஷத்தில் பாரதி திளைக்கிறார். சாப்பிட்டு முடித்த பிறகு கண்ணம்மா இலை எடுக்க பாரதி தான் சாப்பிட இலைக்கு கீழே கயிற்றை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

இதை பார்த்து கண்ணம்மா பாரதி சென்று சந்தித்து தனியாக பேச வேண்டும் என சொல்லி கணேசனை அனுப்பி வைத்துவிட்டு இத்தனை வருஷமா மருத்துவமனை வேண்டும் என மனுமேல மனு கொடுத்துட்டு இருந்தாங்க.. அவங்களால முடியாதத நீங்க செய்து காட்டி சவால் விட்டால் மாதிரி என் கையில சாப்பாடு செஞ்சு சாப்பிட்டு விட்டீர்கள். அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் இருந்தாலும் நான் ஏதாவது கைமாறு பண்ணனும் இல்ல என சொல்லி நீதிமன்ற சமன் பேப்பரை கொடுக்கிறார்.

விவாகரத்து கேசில் வாய்தா மேல வாய்தா போயிடுச்சு, நாம ஆஜராகவே இல்லை. இப்போ சமன் வந்திருக்கு ரெண்டு பேரும் ஆஜராகணும் என சொல்ல விவாகரத்து வேண்டாம் என பாரதி பேச கண்ணம்மா எனக்கு வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம் சௌந்தர்யா சமன் வந்து இருப்பதை நினைத்து வருத்தப்பட்டு அழுது புலம்பி தவிக்கிறார். மறுநாள் காலையில் பாரதியான செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க கணேசன் எனக்கு கண்ணம்மா விட சேர்ந்து வாழணும்னு சொல்லி வாய்தா போட்டுட்டு போங்க, கண்டிப்பா கண்ணுமாவோட மனசு மாத்திடலாம் என ஐடியா கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update 27-12-22
jothika lakshu

Recent Posts

Vengaatu Boomyil Lyrical Video

Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi

37 minutes ago

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

19 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

19 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

19 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

19 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

19 hours ago