Bharathi Kannamma Serial Episode Update 27.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கேசில் இருந்து எல்லா விடுதலையாகி வெளியே வந்ததும் தனது அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நன்றி கூறுகிறார். உடனே சர்மிளா எனக்கு கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா என கேட்டேன் இருக்கு என வெண்பா கூறுகிறார். குட் அப்படினா நாளைக்கு மாப்பிள வீட்ல பொண்ணு பார்க்க வரச் சொல்கிறேன் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
இந்த பக்கம் சிகிச்சைக்காக வந்த சக்தி என்ற குழந்தையின் பெற்றோரை சந்தித்து அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என பாரதி கூறுகிறார். இதைக்கேட்டு பெற்றோர் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனவே செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். ஒரு வாரத்திற்கு குழந்தையை மருத்துவமனையில் அட்மிட் செய்யுமாறு கூறுகிறார்.
மாலை நேரம் ஆனதும் பள்ளியிலிருந்து லஷ்மி மற்றும் ஹேமாவைக் கூட்டிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார் சௌந்தர்யா. கண்ணம்மாவை பார்த்ததும் தேம்பி தேம்பி அழுகிறார் ஹேமா. இனிமே உங்களிடம் பேச மாட்டேன் என சொல்கிறார். நீங்க இது வேலைக்கு வறது பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. நீங்க ஸ்கூலுக்கு வராது அன்னிக்குத்தான் எனக்கு விஷயமே தெரியும் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யாவின் கண்ணம்மாவும் ஹேமாவை சமாதானம் செய்கின்றனர். இந்த நேரத்தில் விக்ரம் வர அவருக்கு லட்சுமியை அறிமுகம் செய்து வைக்கிறார் கண்ணம்மா. அதன்பிறகு குழந்தையுடன் கொஞ்சம் கலாட்டா செய்து விட்டு அங்கிருந்து வேலை விஷயமாக கிளம்புகிறார் விக்ரம். பிறகு சௌந்தர்யா கண்ணம்மா விடம் புதிய வேலை எப்படி இருக்கு என விசாரிக்க அவரும் அதற்கு பதில் சொல்கிறார்.
இந்த பக்கம் ஷர்மிலா பாரதி வெண்பா கைது செய்யப்பட்டதும் ஸ்டேஷனுக்கு வரவில்லை, கேஸ் நடக்கும் இடத்திற்கு வர வில்லை, ஒரு போன் கூட பண்ணி என்ன ஆச்சு என விசாரிக்கவில்லை அவளுக்காக பத்து வருஷமா காத்திருந்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு இருக்க என திட்டி தீர்க்கிறார் ஷர்மிளா. வெண்பா பாரதிக்கு சப்போர்ட் செய்து அவரை அதட்டி அமைதி ஆக்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…