Categories: Health

பல நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி மிகச்சிறந்த மருந்து எது தெரியுமா?

அருகம்புல் சாறு எடுத்து குடித்து வந்தால் உடலிலுள்ள பல வியாதிகள் குணமாகும். அருகம்புல்லை சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கழுவிய பிறகே அதனை பயன்படுத்த வேண்டும்.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இதனை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அருகம்புல் சாறு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

அருகம்புல் சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். மேலும் வாயுத்தொல்லை நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல் சாறு நல்ல மருந்தாக பயன்படும். அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.

அருகம்புல் ஜூஸ் குடிப்பவர்களுக்கு சிறுநீர் நன்கு பிரிந்து சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுக்கும். அருகம்புல்லில் கால்சியம், மெக்னீசியம் உள்ளதால் தினந்தோறும் அதனை குடித்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும்

நுண்கிருமிகளால் தோலில் படை, புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அறுகம்புல் சாறு அருந்தினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

புளிப்பில்லாத கெட்டி தயிரில் அருகம்புல் சாறு 50 மில்லி கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

admin

Recent Posts

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவனம் கவர்ந்த மிருணாள் தாக்கூர் – பூஜா ஹெக்டே!

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…

13 hours ago

குடும்பத்துடன் பாங்காங்கில் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரீகாந்த்… வைரலாகும் புகைப்படங்கள்!

‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

14 hours ago

“என் குடும்பம்” என ஆர்த்தி குடும்பத்துடன் புகைப்படம் பகிர்ந்த குஷ்பு… இணையத்தில் வைரல்!

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து…

14 hours ago

இரட்டை கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகும் விஜய் ரசிகர்கள்!

எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக…

14 hours ago

‘சேயோன்’ படத்துக்குப் பிறகு புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக்…

14 hours ago

Hellallallo Video

Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…

1 day ago