மயூ சொன்ன வார்த்தை, பாக்யாவிற்கு தெரிந்த உண்மை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா காபியை ரசித்து ருசித்து குடித்து தனியாக பேசிக் கொண்டிருக்க ராதிகாவிற்கு சாப்பாடு கொண்டு வரும் இதை பார்த்து சிரிக்கிறார்.

மயூவை பார்த்த பாக்கியா வா மயூ என்று கூப்பிட்டு உட்கார உட்கார வைத்து சாப்பிட ஸ்னாக்ஸ் கொடுக்கிறார். மயூ அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அம்மா பாவம் வாந்தி எடுத்துகிட்டே இருக்காங்க‌. ஆனா எனக்கு சந்தோஷம்தான். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் சொன்னேன் அவங்களும் சந்தோஷப்பட்டாங்க என்று கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து வருகிறார்.

நீங்க ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க உங்களுக்கு சமைச்சதையே எனக்கும் கொடுத்துட்டாங்க பிடிக்கவே இல்லை என்று சொல்கிறார். ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க என்று கேட்க பாட்டி புளி அதிகம் சேர்த்து சமைச்சிட்டு இருப்பாங்க என்று சமாளிக்கிறார்.

அதன் பிறகு எழில் கல்யாண பங்க்ஷன் ஒன்றுக்கு கிளம்ப ஈஸ்வரியையும் வரிங்களா என்று அவர் பேசாமல் அமைதியாக இருக்கிறார். நிலா ஓடி வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க உனக்கு என்ன அழகா இருக்க என்று ஈஸ்வரி சொல்ல அதைக் கேட்டு எழில் அமிர்தா சந்தோஷப்படுகின்றனர்.

திரும்பவும் ஈஸ்வரியை கல்யாணத்துக்கு கூப்பிட நான் உன்கிட்ட பேசறதே கிடையாது இதுல நீ கூப்பிடுற இடத்துக்கு வரணுமா என்று கோபப்படுகிறார். நீ நிலாவை வளர்த்து நல்லா படிக்க வைத்து கட்டுக்கொடி அதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் என்னதான் இருந்தாலும் இவ உன் பொண்ணு கிடையாது வளர்ந்த பிறகு இவனுக்கு விஷயம் தெரிந்தால் உன்னை அப்பா என்று கூட கூப்பிட மாட்டா என்று பேசி காயப்படுத்துகிறார்.

அதன் பிறகு ராதிகா அம்மாவிடம் எதுக்கு மயூ கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பிச்ச என்று கோபப்படுகிறார். அவ எல்லார்கிட்டயும் உண்மைய சொல்ல இருந்தா என்று சொல்ல கமலா இன்னும் சொல்லலையா என்று கேட்கிறார். உடனே கோபியை வீட்டுக்கு வரவைத்து இருங்க மைக் கிட்ட சொல்லிட்டு வரேன் உங்க வீட்டுக்கு போய் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

நீங்க எதுக்கு அத்தை நானே சொல்றேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க கேட்க அதுவரைக்கும் மறைந்து வாந்தி எடுத்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருப்பாளா கேள்வி கேட்க கோபி கூடிய சீக்கிரம் சொல்லுறேன் என்று கூறுகிறார்.

பிறகு ராதிகா மொட்டை மாடியில் நின்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க துணியை காய போட வந்த பாக்கியா பட்டும் படாமல் இதை கேட்டு விடுகிறார். பிறகு கீழே இறங்க வந்த ராதிகா தலை சுத்தி கீழே விழ போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்று கேட்க ராதிகா ஒன்னும் இல்லை என்று சமாளிக்க பாக்கிய நீங்க நடந்துக்கறது எல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருப்பவர்கள் நடந்துக்கிற மாதிரியே இருக்கு என சொல்கிறார். உண்மைய சொல்லுங்க நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என்று கேட்க ராதிகா டேட் தள்ளிப் போச்சு வாந்தி எடுக்கும் போது தான் அதையே கவனிச்சேன் டாக்டர் கிட்ட போய் செக் பண்ண போது கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று சொல்கிறார். நாங்க ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கல என்று சொல்ல பாக்யா நல்ல விஷயம் தானே என்று பேச ராதிகா கீழே இறங்கி வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

3 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

3 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

3 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

3 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

3 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

3 days ago