ராதிகா எடுத்த முடிவு, கண்கலங்கியே ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடல் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து கலங்கியபடி உட்காருகிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவுக்கு ஜூஸ் காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா என்று கேட்க கமலா உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம். நான் பார்த்துக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். மயூ கோபியுடன் கடைக்கு கிளம்ப கமலா அதையும் தடுத்து நிறுத்துகிறார். பிறகு மயூவுடன் அவர் வெளியே செல்ல ராதிகா உங்கம்மா நம்ப குழந்தையை கொன்னுட்டாங்க அவங்க இந்த அளவுக்கு போவாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. இன்று கதறி அழ கோபியும் கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியம் ஈஸ்வரியை வந்து பார்க்க ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். பாக்கியாவை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கண்கலங்கி அழுகிறார். ராதிகாவை டிஸ்டார்ஜ் செய்து கோபி வீட்டுக்கு அழைத்து வர தயாராக ராதிகா நான் அம்மாவோட ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று ஷாக் கொடுக்கிறார். கோபி உன்ன அனுப்ப மாட்டேன் என்று சொல்ல ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

கமலா என் பொண்ணு நான் ஊருக்கு கூட்டிட்டு போய் பார்த்துகிறேன் மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன். உங்க அம்மா இருக்கிற வீட்ல என் பொண்ணை இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். கோபி எங்க அம்மா அப்படி எதுவும் பண்ணியிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என உறுதியாக சொல்கிறார்.

கமலா ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவ அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க இல்லன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை உள்ள தள்ளிடுவேன் என்று எச்சரிக்கிறார். கோபி அம்மாவை எப்படி வெளியே அனுப்ப முடியும் அவர்களிடம் பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் தரேன் என்று சொல்ல ராதிகா அந்த சொல்யூஷன் நான் எதிர்பார்க்கிறதா இருக்குமா என்று கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 21-06-24
jothika lakshu

Recent Posts

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

3 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

3 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

3 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

3 hours ago

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிப்பு… மனம் திறந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…

3 hours ago

மம்மூட்டியின் பத்ம பூஷண் விருதை கேக் வெட்டி கொண்டாடிய ‘ஓம்’ படக்குழு!

இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…

3 hours ago