BaakiyaLakshmi Serial Episode Update 21-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க நான் அம்மாவும் இதை பத்தி பேசவே இல்லை எனக்கா தோணுச்சு போர் அடிக்குது அதனால தான் என்று சொல்லுகிறார் உடனே நித்திஷ் அம்மா இவ்வளவு நாளும் நான் வீட்டில் இருக்கேன் ஒருவாட்டி கூட நான் இது மாதிரி கேட்டதில்லை இப்பதான் நீங்க ஹனிமூன் போயிட்டு வந்தீங்க சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டு இருக்கீங்க பிஸியா தானே இருக்க போர் அடிச்சுதுன்னா வேணும்னா டிவி பாரு என்று சொல்லுகிறார் இல்லனா ஷாப்பிங் போ என்று சொல்ல இனியா அப்போ இல்லனா நானு என்னோட வேலையை கூட இன்னொரு ரிசைன் பண்ணல லீவுல தான் இருக்கேன் நான் அதுக்கு போகவா என்று சொல்ல சுதாகர் அதுக்கும் வேண்டாம் என சொல்லுகிறார்.
உடனே இனியா பேச வர நிதிஷ் கோபப்பட்டு இப்ப எதுக்கு நீ அப்பாவை எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க என்று வார்னிங் கொடுக்க மன்னிப்பு கேட்டு விட்டேன் இனியா சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செழியன் வருகிறார் அவரை உட்கார வைத்துவிட்டு காபி கொடுக்க கொஞ்ச நேரத்தில் கவுன்சிலர் ஆட்களுடன் ஹோட்டலுக்கு வருகிறார்.
பாக்கியாவிடம் எப்பவுமே லேட்டா வரேன்னு சொல்லுவீங்க இல்ல இப்ப கரெக்டா எட்டு மணிக்கு வந்துட்டேன் என்னென்ன இருக்கு என்று கேட்க செல்வி இட்லி தோசை சப்பாத்தி இருக்கு என்று சொல்லுகிறார் எப்பவும் ஒரே மெனு தானா இட்லி சூடா எடுத்துட்டு வாங்க என்று சொல்ல பாக்கியாவும் செல்வியும் உள்ளே போன பிறகு கவுன்சிலர் ஆள் எதுக்கு அண்ணா நம்ம ஏரியாவுல விதவிதமா சிக்கன் மட்டன் எல்லாம் கிடைக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இங்க வரணும் என்று கேட்க எல்லாம் இந்த ஆன்ட்டிக்காக தான் என்று பாக்யாவை சொல்லுகிறார். உடனே செழியன் கேட்டு அதிர்ச்சியாக மேலும் பாக்யாவை பற்றி அந்த கவுன்சிலர் பேசிக்கொண்டே இருக்கிறார் புருஷனை டைவர்ஸ் பண்ணிட்டு தனியா தான் இருக்க ஆன்ட்டி கரெக்ட் பண்ணிடலாமா என்றெல்லாம் பேச பாக்யா வந்தவுடன் கவுன்சிலர் பாக்யாவை பார்த்த விதத்தை பார்த்து செழியன் கோபப்பட்டு இருவருக்கும் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர் இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்ட கவுன்சிலர் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட செழியன் எல்லாமே உன்னால தான் வேணாம் வேணாம்னு சொன்னா கேட்டியா சொல்றதுக்கு அசிங்கமா இருக்கு என்று கோபமாக பேசிவிட்டு வண்டி எடுத்து கொண்டு சென்று விடுகிறார்.
உடனே செல்வியிடம் எழிலுக்கு போன் போட வேண்டும் என்று சொல்லுகிறார் வீட்டில் செழியன் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஈஸ்வரி உங்க அம்மாவ ஹோட்டல் நடத்த வேணா தான் சொல்ல சொன்னேன் நீ எதுக்கு ஹோட்டலில் போய் சண்டை போட்டு என்று சொல்ல எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் உடனே பாக்யா வந்தவுடன் என்னாச்சு என்று கேட்க பெரிய அடி எல்லாம் எதுவும் இல்லமா இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரை கொடுத்திருக்காங்க என்று சொல்ல செழியன் பக்கத்தில் பாக்யா போய் உட்கார செழியன் கோபப்பட்டு எழுந்திருத்து விடுகிறார். என்னாச்சு செழியன் என்று கேட்க கவுன்சிலர் பேசிய விஷயங்களை வீட்டில் சொன்ன உடனேயே இன்னும் கோபப்பட்டு அவனை சாகடித்துவிடுவேன் அவனை இப்படியே போய் என்ன பண்றாங்கன்னு பாரு என்ற கோபப்பட உடனே செழியன் உனக்கு கேட்டதுக்கே இப்படி இருக்கேன் நான் நேர்ல பார்த்தேன் எனக்கு எப்படி இருந்திருக்கும் அதனாலதான் நான் அடிச்சேன் என சொல்ல ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash