ராதிகா மீது கடும் கோபத்தில் கோபி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நைட்டு ராதிகா படுத்து தூங்கிக் கொண்டிருக்க கோபி ஃபோனை வைத்துக் கொண்டு இனியா பேசியதை பார்த்துக் கொண்டிருக்க ராதிகா இதை எடுத்து பார்க்க கோபி லைட் போட்டதும் தூங்குவது போல நடிக்கிறார்.

பிறகு கோபி மீண்டும் வீடியோவை பார்ப்பதை தொடர மீண்டும் ராதிகா இது போல் செய்ய அதன் பிறகு ராதிகா எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க கோபி அதையும் கண்டு கொள்ளாமல் வீடியோ பார்க்க இதனால் கடுப்பாகும் ராதிகா ஃபோனை தூக்கி போட்டு உடைக்கிறார்.

இதனால் கோபமடைந்த கோபி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதனால இனியா என் பொண்ணு இல்லன்னு ஆகிடாது பாக்கியாவை விவாகரத்து பண்ணதுனால எனக்கும் இனியாவுக்கும் இடையில் எதுவும் இல்லைனு ஆகிடாது. எனக்கும் இனியாவுக்கும் இடையில நீ வரணும்னு நினைக்காதே என கோபப்பட்டு வெளியே கிளம்பி செல்கிறார்.

மறுநாள் காலையில் இனியா படித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி உனக்காக காபி போட்டு கொண்டு வரேன் என சொல்லி கிச்சனுக்கு வந்து பாக்கியா மற்றும் செல்வியை நகர சொல்லிவிட்டு காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார். காப்பி பிடிக்காத இனியா உங்களுக்காக குடிக்கிறேன் என சொல்லி குடித்து காபி நல்லா இருக்கு என சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் சோபாவில் வந்து உட்கார பாக்கியா கிச்சனில் இருக்க கீழே இறங்கி வந்த ராதிகா இதை பார்த்து கடுப்பாகி மேலே சென்று விடுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி இனியாவிடம் கோபிக்கு உன் மேல பாசம் அதிகம் இந்த பாசத்தை வச்சு நீயும் அவனிடம் பாசமாய் இருந்து உன்னுடைய கண்ட்ரோல்ல அவன கொண்டு வரணும். அப்புறம் அவன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இங்கேயே இருப்பான் என சொல்லிக் கொடுத்துவிட்டு மாத்திரை போட ரூமுக்கு செல்ல பாக்யா நீ எதுவும் பண்ணாம உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என அறிவுரை வழங்குகிறார்.

அதற்கடுத்ததாக ஆபீசுக்கு கிளம்ப கோபி ரூமுக்கு வர ராதிகா கோபமாக உட்கார்ந்து இருக்க கோபியின் முக்கியமான பைல் ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு நான் கோபமாக இருக்கேன் என சொல்ல கோபமாக இருக்க வேண்டியது நான் தான். என் போனையும் உடைச்சிட்டு இப்ப கோபமா இருக்க மாதிரி நடிக்கிறியா என்று கோபப்படுகிறார்.

நீங்க என்னையும் மயூமையும் கண்டுக்க மாட்டறீங்க என சண்டை போட இப்படி அபாண்டமாக பேசாத என கோபி வாக்குவாதம் செய்கிறார். நீங்கள் முன்ன மாதிரி இல்ல என ராதிகா சொல்ல நீ மட்டும் என்ன அப்படியேவா இருக்க என கோபி பதில் கொடுக்க என்னை மாத்துனது நீதான் என ஒருவரை ஒருவர் மாற்றி குற்றம் சொல்லிக் கொள்கின்றனர்.

உங்க பொண்ணுக்காக என்னையும் மயூவையும் சீட் பண்ணிட்டு போனவர் தானே நீங்க என ராதிகா ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 19-05-23
jothika lakshu

Recent Posts

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…

57 minutes ago

சூர்யா 46 : வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…

4 hours ago

லோகா: 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…

4 hours ago

விஜி சொன்ன வார்த்தை, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

5 hours ago

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

8 hours ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

8 hours ago