போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்கியா.. ராதிகாவிற்காக கோபி செய்த வேலை… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வெளியே எடுக்க வக்கீலை அழைத்து வருகிறார் செழியன். ஆனால் போலீஸார் வெளியே விட முடியாது பிரச்சனை மிகவும் சீரியஸாக உள்ளது என கூறி விடுகின்றனர். வக்கீலும் இப்போதைக்கு அவர்களை வெளியே அழைத்து வர முடியாது நாளைக்கு கோர்ட்டில் தான் பார்த்தாக வேண்டும் எனக் கூறி விடுகிறார்.

இந்த பக்கம் ராதிகாவை எப்படியாவது வெளியே எடுத்தாக வேண்டும் என உனக்கு முடிவு செய்து வக்கீலை வரவைத்து ராதிகாவை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். ராதிகா மேல எந்த தப்பும் இல்ல பள்ளி மொத்தத்தையும் கேட்டரிங் எடுத்துச் அமைத்துக் கொடுத்தவர்கள் மீது தான் போட வேண்டும் என சொல்கிறார். அப்போதுதான் ராதிகாவை வெளியே கொண்டுவர முடியுமென வக்கீல் சொல்ல கோபியும் சரி என கூறுகிறார்.

செழியன் தன் அம்மாவை பார்த்து நாளைக்கு எப்படியாவது உங்களை வெளியே எடுத்து விடுகிறேன் என சொல்ல பாக்கியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கண்கலங்கி அழுகிறார். பிறகு எழில் வந்து என்ன ஆச்சு என விசாரிக்க நடந்ததை கூறுகிறார் செழியன். சரி நான் போய் அம்மாவை போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தனது அம்மாவைப் பார்க்கப் போகிறார். உள்ளே போய் பாக்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உன்னை எப்படியாவது நான் வெளியே கொண்டு வந்து விடுவேன் நீ பயப்படாதே என்று கூறிவிட்டு வருகிறார்.

அதன்பிறகு கோபி வழக்கறிஞருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். வழக்கறிஞரிடம் மயு தனியாக இருப்பா நீங்க போய் ராதிகாவை கூட்டிட்டு வாங்க என அனுப்பி வைக்கிறார். உள்ளே போன வழக்கறிஞர் ராதிகாவை வெளியே அழைத்து வருகிறார்.

வெளியே வருவதற்கு முன்னே ராதிகா ஆகியவை பார்த்து நான் உங்களுக்கு நல்லது தான் நினைத்தேன் ஆனால் நீங்க என்ன இப்படி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டீங்க. இனிமே நீங்க என் வாழ்க்கையில கிடையவே கிடையாது. உங்க முகத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைக்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்துவிடுகிறார்.

ராதிகா வெளியே வந்ததும் மயு தனியாக இருப்பதால் தான் நான் உள்ளே வரவில்லை என சொல்கிறார். பிறகு அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஜூஸ் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கு தனக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருப்பதால் நான் கிளம்புகிறேன் என சொல்ல ராதிகாவும் மய்யூவும் நீங்க போக வேண்டாம் இன்னைக்கும் எங்களுடனேயே இருங்க என விடாப்பிடியாக கூற கோபி வேறு வழியில்லாமல் சரி என சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மேலும் ஏற்கனவே வெளியாகி இருந்த ப்ரோமோ விடியோவில் எழில் சாப்பாட்டில் என்ன பிரச்சனை என கண்டுபிடித்து பாக்கியா குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் நாளை, நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 18.04.22

 

 

jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

3 days ago