பாக்கியா கேட்ட கேள்வி, செல்வி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் பாக்யா செல்வி ஆகாஷ் வேலை செய்து கொண்டிருக்க செல்வி ஆகாஷ் இடம் எக்ஸாமுக்கு படிக்கல என்று சொல்ல அதெல்லாம் படிச்சிட்டேன்மா என்று சொல்லுகிறார் பாக்யாவும் என்ன எக்ஸாம் என்று கேட்க மாடல் எக்ஸாம் என்று சொல்ல நீ போய் படி ஆகாஷ் என்று சொல்லியும் அதெல்லாம் படிச்சிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியா வந்து உட்கார என்ன இனியா வேலை எப்படி போச்சு என்று கேட்க நல்லா தான் போச்சு உனக்கு எப்படி இருக்கு என்று கேட்கிறார் பிறகு ஆடர் பற்றி பேசிக்கொண்டிருக்க பாக்யா அவருக்கு போன் போட்டு நீங்க அட்வான்ஸ் கொடுத்தீர்கள் என்றால் வேலைக்கு ஆரம்பிக்கலாம் என்று கேட்க நான் வெளிய வந்துட்டேன் நீங்க கொடுத்த அட்வான்ஸ் வெச்சு பண்ணுங்க நான் அப்புறம் கொடுக்கிறேன் என்று சொன்ன பாக்யா நீங்க அட்வான்ஸ் கொடுத்தா செய்யறேன்னு எல்லாம் வேணாம் என உறுதியாக சொல்லிவிடுகிறார்.

வேறு வழி இல்லாமல் அவரும் காலையில் வருகிறேன் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்க, மறுநாள் காலையில் கோபி ஹோட்டலுக்கு வருகிறார். செல்வி வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா இல்லையா செல்வி என்று கேட்க அக்கா கடைக்கு போய் இருக்கு என்று சொன்னவுடன் எனக்கு ஒரு காபி கிடைக்குமா என்று சொல்ல செல்வி போட்டுட்டு வர சார் என்று சொல்லுகிறார். பாக்யா மளிகை சாமான் வாங்கிக் கொண்டு வந்து செல்வியிடம் கொடுத்துவிட்டு அட்வான்ஸ் கொடுக்க வந்தாரா என்று கேட்க இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவர் வருகிறார்

வந்த வேகத்தில் என்ன இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஒரு நம்பிக்கை இல்லாம பேசுறீங்க இன்னும் எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று கேட்க நான் அட்வான்ஸ் தானே சார் கேட்டோம் என்று சொல்லுகிறார் நானும் அட்வான்ஸ் பத்தி தான் சொல்றேன் நீங்க 6 அரை லட்சம் என்று சொன்னீங்க ஆனா அதுல பாதி மூணே கால் லட்சம் தானே ஆனால் நான் அஞ்சு லட்சம் கொடுத்து இருக்கேன் என்று சொன்ன பாக்யா மற்றும் செல்வி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீங்க அம்பதாயிரம் தான் கொடுத்தீங்க என்று சொன்ன இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பாக்யா நீங்க கொடுத்த ஐம்பதாயிரம் இங்க தான் இருக்கு எடுத்துக்கிட்டு போங்க என்று சொல்ல என்னை ஏமாத்த பார்க்கிறீர்களா என்று சொல்லுகிறார். கோபி சொல்லியும் கேட்காமல் இருந்த அந்த பாக்யாவிடம்அஞ்சு லட்சத்தை கொடுத்திடுங்க நான் போய்கிட்டு இருக்கேன் என சொல்லுகிறார்.

நீங்க அம்பதாயிரம் கொடுத்தீங்க இந்த அம்பதாயிரம் வாங்கிக்கோங்க என்று சொல்ல நான் போய் போலீஸ் கூட்டிட்டு வரேன் என்று சொல்லி போய் கொஞ்ச நேரத்தில் போலீசுடன் வருகிறார். அவர்கள் வந்து விசாரிக்காக பாக்யா ஐம்பதாயிரம் தான் கொடுத்தேன் என சொல்ல இவர் ஐந்து லட்சம் கொடுத்ததாக சொல்லுகிறார் ஏதாவது ரெசிப்ட் கொடுத்து இருக்கீங்களா என்று கேட்க அதெல்லாம் எதுவும் கொடுக்கல என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் எழில் மற்றும் செழியன் வர என்ன கேட்கின்றனர்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi serial episode update 17-07-25
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

4 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

4 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

4 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

4 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

4 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

4 days ago